முனைவர் முரசு நெடுமாறன்
(மலேசியக் கவிஞர்)
செந்தமிழ் நாட்டுத் திருக்குவளை தோன்றி
இந்த உலகம் ஏறிட்டுப் பார்க்கும் வண்ணம்
விந்தைத் தலைவராய் விளங்கியவர் கலைஞர்
வந்த நொடி யேசிக்கல் வாய் பிளக்க வைத்தவர்!
இளமையில் மேதைமை இயல்பாய் வாய்ப்ப துண்டு
கலைஞ ரவர்க்குக் கைவந்த தச்செல்வம்
வளமை பெற்றோங்கி வடித்த இலக்கியங்கள்
கலங்கரை விளக்காம் கற்றோர்க்கு இது விளங்கும்!
பெரியார் அண்ணா பெற்றிகள் எல்லாம்
ஒருங்கிணைந்த தன்மைபோல் ஒருவடிவம் கலைஞர்
வரைந்தஅத் திட்டங்கள் வரிசைபெற ஆண்டார்!
ஒரு தலைவன் இங்ஙனம் உண்டோ எனவாழ்ந்தார்!
ஒன்றியத்திற் கெட்டா உயரிய சிந்தனைகள்
கொண்டிருந்தார் கலைஞர் கொள்ளவில்லை அப்போது
வந்தது வேளை வண்ணம் புரியவே,
அந்தப் பாங் கெல்லாம் அரங்கேறும் காலமிது?
வாழ்நாளில் பெரும்பகுதி வழங்கி நான் படைத்த
மேல் நிலைக் களஞ்சியத்தை வீட்டிற்குப் போயளித்தேன்
நூல் கையில் பெற்ற நொடியில் அதை உணர்ந்து
பால்வார்த்தல் போலப் பாவேந்தர் விருதளித்தார்
ஒருநூற் றாண்டது ஓடி மறைய
மறுநூற் றாண்டு மலர்ந்ததே அதுதான்
சிறுநூற் றாண்டன்று வரையறுக்க முடியா
நறுங்காலம் நீளும் நற்கலைஞர் வாழியவே!