50 வயதை கடந்த மாற்றுத்திறனாளி அரசுப் பணியாளர்கள் மூன்று முறை துறைத் தேர்வு எழுதியும் தேர்ச்சி பெறாதவர்களுக்கு விலக்கு தமிழ்நாடு அரசு ஆணை

2 Min Read

சென்னை, ஆக. 23- அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் துறைத் தேர்வுகளை முதல் 3 முறை எழுதியும் தேர்ச்சி பெறாத, 50 வயதை கடந்த மாற்றுத்திறனாளி அரசு பணியாளர்களுக்கு மீண்டும் துறைத் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்களித்து தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
அரசு வேலைவாய்ப்புகளில் மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிப்பதற்கான உச்ச வயது வரம்பில்10 ஆண்டுகள் தளர்வு வழங்கப்படுகிறது. வேலைவாய்ப்பு பெறும் மாற்றுத்திறனாளிகளில் பெரும்பாலானவர்கள் 40 வயது ஆன நிலையில் பணியில் சேர்வதால், பணிவரன் முறை மற்றும் பதவிஉயர் வுக்காக, அந்தந்த துறைகளால் நடத்தப் படும் துறைத் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவதில் சிரமத்தை சந்திக்கின்றனர். எனவே, குறிப்பிட்ட சில பிரிவுகளில் மாற்றுத்திறனாளி பணியாளர்களுக்கு துறைத் தேர்வுகள் எழுதுவதிலிருந்து விலக்கு அளிக்க கோரிக்கை வைக்கப் பட்டது.

இதற்கிடையில், தமிழ்நாடு சட்டப் பேரவையில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மானியக் கோரிக்கை யின்போது, “தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் துறைத் தேர்வுகளை முதல் 3 முறை எழுதியும் தேர்ச்சி பெறாத 50 வயதை கடந்த பார்வைத்திறன், செவித்திறன் பாதிப்பு, கற்றல் குறைபாடு, அறிவு சார் குறைபாடுமற்றும் புற உலக சிந்தனையற்ற மாற்றுத்திறனாளி அரசு பணியாளர்களுக்கு மீண்டும் துறைத் தேர்வுஎழுதுவதிலிருந்து விலக் களிக்கப்படும் என்று தமிழ்நாடு முதல மைச்சரால் கடந்த ஜூன் 21ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, இந்த மாற்றுத்திறனாளி பணியாளர்களுக்கு அந்தந்த பதவி களுக்குரிய துறைத்தேர்விலிருந்து சில நிபந்தனைகளுக்குட்பட்டு விலக்களித்து ஆணை வெளியிட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குநர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்நிலையில், இந்த மாற்றுத்திறனாளி அரசு பணியாளர்களுக்கு மீண்டும் துறைத் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்களித்து தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட ஆணை:
மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநரின் கருத்துருவினை அரசு கவனமாக பரிசீலித்து, அதனை ஏற்று அரசு துறை வேலை வாய்ப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான 4 விழுக்காடு இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் அரசின் பல்வேறு துறைகளில் பணிபுரிகின்றனர். இதன்படி பார்வைத்திறன் பாதிப்பு, செவித்திறன் பாதிப்பு, கற்றல் குறைபாடு, மனவளர்ச்சி குன்றியவர்கள், புறஉலக சிந்தனையற்ற மற்றும் கை, கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தினால் நடத்தப்படும் அந்தந்த பதவிகளுக்குரிய உரிய துறை தேர்விலிருந்து நிபந்தனை யுடன் விலக்களித்து அரசு ஆணையிடு கிறது.
சம்பந்தப்பட்ட மாற்றுத்திறனாளிகள் 50 வயதுக்கு குறையாதவராக இருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட மாற்றுத்திறனாளிகள் துறைத் தேர்வுகளில் தேர்ச்சி பெற குறைந்தது 3 தடவைகளாவது முயற்சி செய்திருக்கவேண்டும். இதற்கு அத்தாட்சியாக பணிப்பதிவேட்டில் விவரம் இருக்க வேண்டும் அல்லது இது குறித்து நுழைவுசீட்டுகளை வைத்து சம்பந்தப்பட்ட அலுவலர் விண்ணப்பிக்கவேண்டும்.
இவ்வாறு ஆணையில் கூறப்பட்டு உள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *