உரத்தநாடு, ஆ.க. 23- உரத்தநாடு வடக்கு ஒன்றியம்,ஒரத்தநாடு நகர திராவிடர் கழகம் நடத்திய சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா, மூட நம்பிக்கை ஒழிப்பு, பெண்ணுரிமை பாதுகாப்பு, இந்திய அரசியல் சட்டம் 51A(h) பிரிவு விளக்க பரப்புரைக் கூட்டம் 20-08-2024 அன்று மாலை உரத்தநாடு பேருந்து நிலையம் பெரியார் படிப்பகம் அருகில் மிகச் சிறப்புடன் நடைபெற்றது
கழகப் பேச்சாளர் இரா.பெரியார் செல்வன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் முனைவர் வே.இராஜவேல் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
சுயமரியாதை இயக்கத்தின் தோற்று வித்ததின் நோக்கம் நூற்றாண்டுகளில் பெற்ற சாதனைகள் குறித்தும் மற்றும் மூடநம்பிக்கையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் தந்தை பெரியாரின் பெண்ணுரிமைச் சிந்தனைகள் குறித்தும் விளக்கமாக உரையாற்றினர்
பேரா க.சுடர்வேந்தன் மந்திரமா? தந்திரமா? என்னும் அறிவியல் விளக்க நிகழ்ச்சியை நடத்தினார்.
உரத்தநாடு வடக்கு ஒன்றிய தலைவர் இரா.துரைராசு நிகழ்வுக்கு தலைமை ஏற்று உரையாற்றினார் உரத்தநாடு நகர செயலாளர் பு.செந்தில் குமார் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார் ஒரத்தநாடு நகரத் தலைவர் பேபி.ரெ.இரவிச்சந்திரன் உரத்தநாடு வடக்கு ஒன்றிய செயலாளர் அ.சுப்பிரமணியன், வடக்கு ஒன்றிய துணைச் செயலாளர் கோ.இராமமூர்த்தி வடக்கு ஒன்றிய தொழிலாளர் அணி தலைவர் ரெ.சசிக்குமார் ஒரத்தநாடு நகரத் துணைத் தலைவர் மு.சக்திவேல், நகர இளைஞரணி செயலாளர் மா.சாக்ரடீஸ் ஆகியோர் முன்னிலை ஏற்று உரையாற்றினர்
திருவோணம் ஒன்றிய தலைவர் சாமி. அரசிளங்கோ, வடக்கு ஒன்றிய இளைஞரணி துணை செயலாளர் ராஜதுரை, வடக்கு ஒன்றிய விவசாய அணி செயலாளர் கோவில்.ராமதாஸ், மாநில கலைத்துறை செயலாளர் சித்தார்த்தன், திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் ஆகியோர் கருத்துரை ஆற்றினர்
தஞ்சை மாவட்ட திராவிடர் கழக செயலாளர் வழக்குரைஞர்அ. அருணகிரி, மாவட்ட தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங் ஆகியோர் தொடக்க உரையாற்றினர்
தஞ்சை தெற்கு ஒன்றிய தலைவர் த. ஜெகநாதன், தெற்கு ஒன்றிய விவசாய அணி தலைவர், ம.மதியழகன், நகர இளைஞரணி துணை செயலாளர் அ. மாதவன், மண்டலகோட்டை செந்தில்குமார், தஞ்சை பெரியார் செல்வன் உள்ளிட்ட,திராவிடர் கழக, மாநில, மாவட்ட ,ஒன்றிய நகர,கிளைக் கழக பொறுப்பாளர்கள் மற்றும் தி.மு.க உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.
நகர இளைஞரணி தலைவர் பொறியாளர் ச.பிரபாகரன் நன்றியுரை ஆற்றினார்.