சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழாவை சிறப்பாக நடத்த வேலூர் மாவட்ட கழக கலந்துரையாடலில் தீர்மானம்

1 Min Read

காட்பாடி, ஆக. 23- வேலூர் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 14.08.24 மாலை 5 மணியளவில் RICT காந்திநகர், காட்பாடியில் சிறப்பாக நடைபெற்றது
மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் சிறப்புரையாற்றினார், மாவட்டத் தலைவர் வி. இ.சிவகுமார் தலைமையில் மாவட்ட செயலாளர் உ.விஸ்வநாதன் வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட காப்பாளர் வி.சடகோபன், பொதுக்குழு உறுப்பினர் கு.இளங்கோவன் ஆகியோர் ஆக்க உரையாற்றினர்.

நகரத் தலைவர் சாந்தகுமார், பொதுக்குழு உறுப்பினர்கள் சிகாமணி, வேலூர் மாநகர செயலாளர் அ.மொ.வீரமணி, மாநகர அமைப்பாளர் பகுத்தறிவு கழகம் தி.க.சின்னதுரை, மாவட்ட இளைஞர் அணி தலைவர் பொ.தயாளன், மாவட்ட இளைஞரணி செயலாளர் இ.தமிழ்தரணி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மு.சீனிவாசன் உள்ளிட்ட உறுப்பினர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
கலந்துரையாடல் கூட்டத்தில் கும்பகோணம் பொதுக்குழு தீர்மானங்களை நிறைவேற்றுவது, திருச்சி பெரியார் உலகம், 28.08.24 அன்று மூடநம்பிக்கை ஒழிப்பு பிரச்சாரம் காட்பாடி சித்தூர் பேருந்து நிலையத்தில் நடைபெறுவதாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இறுதியாக மாவட்ட இளைஞரணி செயலா ளர் இ.தமிழ்தரணி நன்றியுரை ஆற்றினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *