சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழாவை சிறப்பாக நடத்த வேலூர் மாவட்ட கழக கலந்துரையாடலில் தீர்மானம்

Viduthalai
1 Min Read

காட்பாடி, ஆக. 23- வேலூர் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 14.08.24 மாலை 5 மணியளவில் RICT காந்திநகர், காட்பாடியில் சிறப்பாக நடைபெற்றது
மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் சிறப்புரையாற்றினார், மாவட்டத் தலைவர் வி. இ.சிவகுமார் தலைமையில் மாவட்ட செயலாளர் உ.விஸ்வநாதன் வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட காப்பாளர் வி.சடகோபன், பொதுக்குழு உறுப்பினர் கு.இளங்கோவன் ஆகியோர் ஆக்க உரையாற்றினர்.

நகரத் தலைவர் சாந்தகுமார், பொதுக்குழு உறுப்பினர்கள் சிகாமணி, வேலூர் மாநகர செயலாளர் அ.மொ.வீரமணி, மாநகர அமைப்பாளர் பகுத்தறிவு கழகம் தி.க.சின்னதுரை, மாவட்ட இளைஞர் அணி தலைவர் பொ.தயாளன், மாவட்ட இளைஞரணி செயலாளர் இ.தமிழ்தரணி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மு.சீனிவாசன் உள்ளிட்ட உறுப்பினர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
கலந்துரையாடல் கூட்டத்தில் கும்பகோணம் பொதுக்குழு தீர்மானங்களை நிறைவேற்றுவது, திருச்சி பெரியார் உலகம், 28.08.24 அன்று மூடநம்பிக்கை ஒழிப்பு பிரச்சாரம் காட்பாடி சித்தூர் பேருந்து நிலையத்தில் நடைபெறுவதாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இறுதியாக மாவட்ட இளைஞரணி செயலா ளர் இ.தமிழ்தரணி நன்றியுரை ஆற்றினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *