தந்தை பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி அரூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடலில் முடிவு!

Viduthalai
3 Min Read

அரூர், ஆக. 23- அரூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம் 18.8.2024 அன்று மாலை 4 மணியளவில் அரூர் சாக்கியா அறக்கட்டளை அரங்கத்தில் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் சா. இராசேந்திரன் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் தீ.சிவாஜி வரவேற்பு உரையாற்றினார்.
நிகழ்ச்சியின் தொடக்கமாக கவிஞர் கீரை பிரபாகரன் இயற்றிய, தந்தை பெரியார் பற்றிய பாடலை பாடகர் மணிமேகலை பாடினார்.
மாவட்ட கழக தலைவர் கு.தங்கராஜ், மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் ஆடை தேசிங்குராஜன், சாக்கிய நிதி நிறுவனர் சாக்ரடீஸ், கவிஞர் கீரை பிரபாகரன், பேராசிரியர் கோபிநாத், திமுக பகுத்தறிவு இலக்கிய அணி மாவட்ட தலைவர் பி.அன்பழகன்,கட்டரசம்பட்டி கா.ராமச்சந்திரன், ஆகியோர் முன்னிலை ஏற்றனர்.
தலைமைக் கழக அமைப்பாளர் ஊமை. ஜெயராமன் தொடக்க உரையாற்றினார், மாநில கலைத்துறை செயலாளர் மாரி. கருணாநிதி அறிமுக உரையாற்றினார்.
பகுத்தறிவாளர் கழக தோற்றமும், வளர்ச்சியும், குறித்து மாநில பகுத்தறிவாளர் கழக துணைப் பொதுச்செயலாளர் அண்ணா சரவணன் விளக்க உரையாற்றினார்.

மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் சி. என். அண்ணாதுரை, மாநில மகளிர் அணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, கழக காப்பாளர் அ.தமிழ்ச்செல்வன், கவிஞர் கீரை பிரபாகரன் ஆகியோர் கருத்துரையாற்றினர்.
இறுதியாக, மாநில பகுத்தறிவாளர்கள் தலைவர் இரா.தமிழ்ச்செல்வன் மாவட்ட ஒன்றிய பகுத்தறிவாளர் கழகம், மாவட்ட பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் விடுதலை வாசகர் வட்ட பொறுப்பாளர்களை நியமித்து அறிவித்தார். பகுத்தறிவாளர் கழகத்தின் செயல் திட்டங்கள், தந்தை பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு கல்லூரி மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி நடத்துவது, திருச்சியில் டிசம்பர் 28, 29ஆம் தேதி களில் நடைபெறும் நாத்திகர் மாநாட்டில் பங்கேற்பது குறித்தும் அதற்கான நிதி தேவை குறித்து சிறப்புரையாற்றிய அவர் அரூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் தமிழ்நாட்டின் முன்னோடி மாவட்டமாக செயல்பட்டு வருகிறது, முறையாக அமைப்பை ஏற்படுத்தி கடந்த காலங்களில் செய்த பணிகளை அறிக்கையாக அளித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என தெரிவித்தார்.

திருச்சியில் நடைபெறும் நாத்திகர் மாநாட்டிற்கு அரூர் மாவட்ட கழகத்தின் சார்பில் நிதியை உறுதி செய்து அறிவிக்குமாறு கேட்டுக் கொண்டார். அதை ஏற்று மாவட்ட பகுத்தறிவாளக் கழகத் தலைவர் சா. இராஜேந்திரன்
1.50 லட்சம் வசூலித்தித் தருவதாக அறிவித்ததும் கழகத் தோழர்கள் கையொலி எழுப்பி வரவேற்றனர்.
கலந்துரையாடலில், தந்தை பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு கல்லூரி மாணவ மாணவிகளுக்கு பேச்சுப் போட்டி நடத்தி அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்குவது என முடிவு செய்யப்படுகிறது எனவும், திருச்சியில் டிசம்பர் மாதம் 28, 29ஆம் தேதிகளில் பல்வேறு மாநிலங்கள், நாடுகளிலிருந்து கலந்துகொண்டு எழுச்சியாக நடைபெறும் நாத்திகர் மாநாட்டில் அரூர் மாவட்டத்திலிருந்து பெருந்திரளாக கழகத் தோழர்கள் கலந்து கொள்வதுடன் அதற்கான நிதியை திரட்டி அளிப்பது எனவும், செப்டம்பர் 17ஆம் தேதி தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாளை பட்டித் தொட்டி எங்கும் சிறப்பாக கொண்டாடுவதுடன் கழக கொடிகளை ஏற்றி இனிப்பு வழங்கி பள்ளி மாணவர்களுக்கு பரிசளிப்பது எனவும் முடிவு செய்யப்படுகிறது.

பங்கேற்றோர்
ஒன்றிய ப. க. தலைவர் என்.டி. குமரேசன், சோலை பிலவங்கன், மகளிர் அணி தோழர்கள் மணிமேகலை, கல்பனா, உமா, கலைச்செல்வி, விக்டோரியா, பாடகர் மணிமேகலை, அக்சயா, பரை யப்பட்டி வழக்குரைஞர் வடிவேலன், சிந்தல் பாடி பச்சையப்பன், பூபாலன், அமர்நாத், புலவர் நெடுமிடல், அறிவுமணி, பாளையம் பசுபதி, அரூர் பகலவன், வேப்பம்பட்டி ராகுல், குப்புசாமி, வடிவேல், கடத்தூர் சரவணன், புஷ்பலிங்கம் பெத்தூர் தீர்த்தகிரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *