மாவட்ட கல்வி அலுவலர்கள் 57 பேர் இடமாற்றம்

1 Min Read

தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை

சென்னை, ஆக.23 பள்ளிக்கல்வித் துறையில் 21.8.2024 அன்று ஒரே நாளில் 57 மாவட்ட கல்வி அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் வெளியிட்டுள்ள உத்தரவு:
தமிழ்நாடு பள்ளிக்கல்வி பணியில் மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் அதற்கு இணையான பணியிடங்களில் பணிபுரிந்து வரும் 57 பேர் நிர்வாக நலன் கருதி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மாறுதல் அளிக்கப்பட்டுள்ள மாவட்ட கல்வி அதிகாரிகள் , மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளால் நியமனம் செய்யப்படும் பொறுப்பு அலுவலர்களிடம் தங்கள் பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு உடனடியாக புதிய பணியிடத்தில் சேருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மாவட்ட கல்வி அதிகாரிகள் தொடக்கக் கல்வி, தனியார் பள்ளிகள், இடைநிலை என மூன்று பிரிவுகளில் பணியாற்றி வரும் நிலையில்,அவர்களில் தனியார் பள்ளிகள் பிரிவில் பணிபுரியும் மாவட்ட கல்வி அதிகாரிகள்தான் அதிக எண்ணிக்கையில் இடமாற்றத்துக்கு உள்ளாகியுள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *