இதற்குப் பெயர்தான் நீட் தேர்வு 70 விழுக்காட்டுக்கு மேற்பட்டோர் 2 முறைக்கு மேல்c

2 Min Read

சென்னை, ஆக.23- மருத்துவப் படிப்புக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வில் இடங்களை தேர்வு செய்தவர்களில் 70 சதவீ தத்துக்கும் மேற்பட்டோர் 2 அல்லது அதற்கு மேலாக நீட் தேர்வை எழுதிய வர்களாக உள்ளனர் .
மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நீட் மதிப் பெண் அடிப்படையிலேயே நடந்து வருகிறது. அந்த வகை யில் தமிழ்நாட்டில் உள்ள மருத் துவக் கல்லூரிகளில் அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு தொடங்கி உள்ளது. இதில் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனை வளாகத்தில் நேரடியாக நடந்தது.
மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 211 எம்.பி.பி.எஸ்., 11.பி.டி. எஸ். என மொத்தம் 223 இடங்களுக்கும், விளையாட்டுப் பிரிவில் 7 எம்.பி.பி.எஸ்., 1 பி.டி.எஸ். என மொத்தம் 8 இடங்களுக்கும், முன்னாள் படைவீரர்களின் வாரிசுகள் பிரிவில் 10 எம்.பி.பி.எஸ்., 1 பி.டி.எஸ். என 11 இடங்களுக்கும், அரசு பள்ளி மாணவ- மாணவி களுக்கான 7.5சதவீத உள் ஒதுக் கீட்டு பிரிவில் 496 எம்.பி.பி.எஸ்., 128 பி.டி.எஸ். என 624 இடங்களுக்கும் கலந்தாய்வு நடத்தப்பட்டது

மாணவ-மாணவிகள் தங்களுடைய பெற்றோர், பாது காவலருடன் கலந்தாய்வில் பங்கேற்று, தங்களுடைய வரிசை வரும்போது என்ன இடங்கள் இருக்கிறதோ? அதில் அதில் விரும்பிய ஓரிடத்தை ஆர்வமுடன் தேர்வு செய்தனர். கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த 28 ஆயிரத்து 819 பேரில், 21 ஆயிரத்து 28 பேர் 2ஆவது முறை அல்லது அதற்கு மேல் நீட் தேர்வை எழுதியவர்கள் ஆவார்கள். அந்த எண்ணிக்கையின் எதிரொலி, இடங்களை தேர்வு செய்தவர்களி லும் இருந்தது.
அதிலும் நேற்று (22.8.2024) சிறப்பு பிரிவில் இடங்களை தேர்வு செய்தவர்களில் சுமார் 70 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் 2 தடவை அல்லது அதற்கு மேல் நீட் தேர்வை எழுதியவர்களாகவே இருந்தனர்.

இந்த எண்ணிக்கை ஒவ் வொரு ஆண்டும் அதிகரித்து கொண்டேதான் வருகிறது. அதிலும் இந்த ஆண்டு இதற்கு முந்தைய ஆண்டுகளின் எண்ணிக்கையை விட அதிகம் என்று சொல்லப்படுகிறது. முதல் முறை நீட் தேர்வு எழுதி இடம் பெற்றவர்கள் அத்திபூத்தாற் போல் தான் பார்க்க முடிந்தது.
பொதுப்பிரிவினருக்கு இணைய வழி வாயிலாக கலந் தாய்வு தொடங்கி நடந்து வருகிறது. விருப்ப இடங்களை தேர்வு செய்தல், தற்காலிக ஒதுக்கீடு ஆணை வழங்குதல், இறுதி ஒதுக்கீடு ஆணை பெறுதல் என கலந்தாய்வு வருகிற 30ஆம் தேதி வரை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த கலந்தாய்விலும் இதே போல் 2ஆவது அல்லது அதற்கு மேல் நீட் தேர்வை எழுதியவர்கள்தான் அதிக இடங்களை பெறுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *