புதுடில்லி, ஆக. 22- அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மருத் துவர்களுக்கு பணியிடப் பாதுகாப்பை உறுதி செய்ய 10 மருத்துவர்கள் கொண்ட தேசிய அளவிலான குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்து உத்தரவு பிறப் பித்துள்ளது.
கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் பாலி யல் வன்கொடுமை செய் யப்பட்டு கொலை செய்யப் பட்ட வழக்கினை, உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. தலைமை நீதிபதி தலைமையிலான 3 நீதிபதிகள் வழக்கை விசாரித்தனர்.
அப்போது, பெண்க ளுக்கு பாதுகாப்பு மட்டும் பிரச்சினையாக இல்லை என்றும், பணிச் சூழலும் முக்கியமான பிரச்சி னையாக உள்ளது என நீதிபதிகள் குறிப்பிட்டனர். பெண்களுக்கு பாதுகாப் பான பணிச் சூழலை உருவாக்க தேசிய அளவில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட பெண் ணின் ஒளிப்படத்தை ஊடகங்களில் வெளியிட் டது கவலை அளிப்பதாக உள்ளது என கூறிய நீதி பதிகள், பெற்றோர்கள் உடலைக் காண அனுமதி மறுத்தது, தற்கொலை என்று வதந்தி பரப்பியதை ஏற்க முடியாது என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித் தனர்.
கேரளா, தமிழ்நாடு, தெலங்கானா உள்ளிட்ட சில மாநிலங்கள் மருத்து வர்களுக்கான பாதுகாப்புச் சட்டத்தை இயற்றினாலும் அது போதுமானதாக இல்லை என்றும், நீதிபதிகள் தெரிவித்தனர்.
பின்னர் அரசு, தனியார் மருத்துவமனை களில் மருத்துவர்களுக்கு பணியிடப் பாதுகாப்பை உறுதி செய்ய 10 மருத்து வர்கள் கொண்ட தேசிய அளவிலான குழுவை உச்சநீதிமன்றம் அமைத்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
தேசிய அளவில் மருத் துவமனைகளில் மருத் துவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என் றும், குழுவில் ஒன்றிய அமைச்சரவை செயலாளர், உள்துறை செயலாளர், சுகாதாரத் துறை செய லாளர், மருத்துவ ஆணைய தலைவர் உள்ளிட்டவர்களும் சேர்க் கப்பட்டுள்ளனர்.
அரசு, தனியார் மருத்துவமனைகளில் பாலியல் தொல்லை குறித்து புகார் தெரிவிக்க, விசாரணை நடத்த உரிய குழுக்கள் அமைக்கப்பட வேண்டும் என்றும், மூன்று வாரத்தில் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் இரண்டு மாதத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தர விட்டுள்ளனர்.