மராட்டிய மாநிலத்தில் பா.ஜ.க.வைத் தோற்கடிக்க காங்கிரஸ் கூட்டணியில் இணைய ஓவைசி தயாராம்!

1 Min Read

சத்ரபதி சம்பாஜிநகர், ஆக. 22- மராட்டிய மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜகவைத் தோற்கடிக்க எதிர்க் கட்சிகளின் கூட்டணியான மகாராட்டிர விகாஸ் அகாடியில் இணையத் தயாராக இருப்பதாக அசாதுதீன் ஒவைசி தலைமை யிலான அகில இந்திய மஜ்லிஸ் கட்சி அறிவித்துள்ளது.
மஜ்லிஸ் கட்சியின் மராட்டிய மாநில தலைவர் இம்தியாஸ் ஜலீல் கூறுகையில், ‘மக்களவைத் தேர்தல் நடைபெற்றபோதும் பாஜகவைத் தோற்கடிப்பதற்காக மராட்டிய மாநிலத்தில் எதிர்க்கட்சிகள் அணியில் இணைய விருப்பம் தெரிவித்தோம்.
அடுத்து நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தேர்தலிலும் அதே நிலைப்பாட்டில்தான் இருக்கிறோம். பாஜகவைத் தோற்கடிக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.

ஆனால், எதிர்க்கட்சி கூட்டணியினர் எங்களை சேர்த்துக் கொள்வது என்பது அவர்கள் கையில்தான் உள்ளது. கூட்டணி ஏற்படாவிட்டால் மஜ்லிஸ் கட்சி தனித்துப் போட்டியிடும்.
எங்களை இணைத்துக் கூட்டணியில் கொண்டால், எதிர்க்கட்சிகளுக்குதான் அதிக பலன் கிடைக்கும். எதிர்க் கட்சிகள் அணியில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சி இருப்பதால் எங்களுக்கு எந்தப் பிரச் சினையும் இல்லை. பாஜக நாட்டை மோசமான பாதைக்கு கொண்டு செல்கிறது.
எனவே, அக்கட்சியை அனைத்துத் தேர்தல்களிலும் தோற்கடிக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம் என்றார் அவர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *