தமிழ்நாடு அரசின் திட்டம் தஞ்சை, நாகை, மயிலாடுதுறையில் உணவுத் தொழில் பூங்கா

Viduthalai
1 Min Read

சென்னை, ஆக.22- உணவு தொழிலில் ஈடுபட்டுள்ள சிறு, நடுத்தர நிறுவனங்கள் தொழில் துவங்க, தஞ்சை, நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் தலா ஒரு உணவுத் தொழில் பூங்காவை, தமிழ்நாடு அரசு அமைக்க உள்ளது.
தமிழ்நாடு அரசு, தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களை, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்ட லமாக அறிவித்துள்ளது.
எனவே, டெல்டா மாவட்டங்களில் வேளாண் பொருட்களை மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களாக தயாரிப்பது, உணவுப் பதப்படுத்துதல் உள்ளிட்ட நிறுவ னங்கள் தொழில் துவங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து, இதற்கான நிறுவனங்களுக்கு தேவையான தொழில்மனைகளை வழங்க, தமிழ்நாடு அரசின், ‘சிட்கோ’ எனப்படும் சிறு தொழில் வளர்ச்சி நிறுவனம், உணவுத் தொழில் பூங்காக்களை அமைக்க உள்ளது.

தற்போது திருவாரூர் மாவட்டம், வண்டாம்பாளையில், 8 கோடி ரூபாய் செலவில், 18.83 ஏக்கரில் தொழிற்பேட்டை அமைக்கப்படுகிறது. மேலும், தஞ்சை, நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங் களிலும் உணவு தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது.
இதுகுறித்து, சிறு, குறு, நடுத்தர தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தமிழ்நாடு அரசு, திருச்சி, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை ஆகிய 5 மாவட்டங்களை உள்ளடக்கி, 1,070 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வேளாண் தொழில் பெரு வழித்தடம், அமைக்க உள்ளது.
இத்திட்டத்தின் கீழ், 5 மாவட்டங்களி லும் தலா ஒரு உணவுப் பூங்கா அமைக்கப் பட உள்ளன. ஏற்கெனவே, திருச்சியில் உணவுப் பூங்கா உள்ள நிலையில், திருவாரூரில் அமைக்கும் பணி நடக்கிறது.
மற்ற மூன்று மாவட்டங்களில் உணவுப் பூங்காவுக்கு நிலம் ஒதுக்கீடு செய்வது தொடர்பாக, மாவட்ட நிர்வாகத் திடம் வலியுறுத்தப்பட்டு உள்ளது. நிலம் கிடைத்ததும் பணிகள் துவங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *