புதுடில்லி, ஆக. 22- கடந்த ஆண்டு நடத்தப்பட்ட எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்வுகளில் நாடு முழுவதும் 65 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை என்ற அதிர்ச்சித் தகவலை ஒன்றிய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஒன்றிய கல்வி அமைச்சகம் வெளியிட் டுள்ள ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
65 லட்சம் மாணவர்கள் தோல்வி
நாடு முழுவதும் 56 மாநில கல்வி வாரியங்கள் மற்றும் 3 தேசிய கல்வி வாரியங்கள் உட்பட 59 பள்ளி கல்வி வாரி யங்கள் மூலம் எஸ்.எஸ்.எல். சி.மற்றும் பிளஸ்-2 தேர்வுகள் நடத்தப்படுகின்றன. கடந்த ஆண்டு நடத்தப்பட்ட எஸ். எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்வு முடிவுகளை பகுப்பாய்வு செய்ததில், பிளஸ்-2 தேர்வை அரசு பள்ளிகளில் அதிக அளவு மாணவிகள் எழுதியுள்ளனர், ஆனால் தனி யார் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் குறைந்த அளவிலான மாண விகளே தேர்வு எழுதியுள்ள னர் .
10ஆம் வகுப்பு படித்த சுமார் 33.5 லட்சம் மாணவர்கள், 11ஆம் வகுப்புக்கு செல்ல வில்லை. காரணம் 5.5 லட்சம் பேர் தேர்வு எழுதவில்லை, 28 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை.
இதேபோல், சுமார் 32.4 லட்சம் மாணவர்கள், 12ஆம் வகுப்பை தாண்டவில்லை. இவர்களில் 5.2 லட்சம் பேர் தேர்வே எழுதவில்லை. 27.2 லட்சம் பேர் தோல்வியடைந் துள்ளனர்.
உத்தரபிரதேசம், பீகாரில் தோல்வி அதிகம்
எஸ்.எஸ்.எல்.சி.தேர்வில் மத்திய கல்வி வாரியத்தில் மாணவர்கள் தோல்வி 6 சத வீதம். மாநில வாரியங்களின் தோல்வி 16சதவீதம். பிளஸ்-2 தேர்வில், மத்திய வாரியத்தில் தேர்ச்சி பெறாதோர் 12 சதவீத மாகவும், மாநில வாரியங்களின் தேர்ச்சி பெறாதவர்கள் 18 சதவீதமாகவும் உள்ளது. 10 மற்றும் 12ஆம் வகுப்புகளில் திறந்தநிலைப் பள்ளிகளின் செயல்திறன் மோசமாக உள் ளது.
மத்தியபிரதேச மாநிலவாரி யத்தில் எஸ்.எஸ்.எல்.சி. மற் றும் பிளஸ்-2 தேர்வில் மாண வர்கள் அதிக அளவில் தோல்வி அடைந்துள்ளனர். பீகார், உத்தரபிரதேச மாநி லங்களில் பிளஸ்-2 தேர்வில் மாணவர்கள் அதிக அளவில் தோல்வி அடைந்துள்ளனர். 2022ஆம் ஆண்டை ஒப்பிடுகை யில் 2023ஆம் ஆண்டில் மாணவர்களின் ஒட்டுமொத்த செயல்திறன் குறைந்துள்ளது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் தேர்ச்சி பெறுவதில் மாணவிகளே ஆதிக்கம் செலுத்துகிறார்கள். மேற்கண்டவாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.