கோவை, ஆக.22- கோவை மாவட்ட கழக சார்பில் மூட நம்பிக்கை ஒழிப்பு- பெண்ணுரிமை பாதுகாப்பு இந்திய அரசியல் சட்டம் 51.A(h) பிரிவு விளக்க பரப்புரை தெருமுனை கூட்டம் கோவை உக்கடம் பகுதியில் 21.08.2024 புதன் கிழமை மாலை 6:00 மணி அளவில் பகுதி கழக தலைவர் தெ.குமரேசன் தலைமையில் நடைபெற்றது
நிகழ்ச்சியில் மாநகர கழக செய லாளர் புலியகுளம் க.வீரமணி வரவேற்புரையாற்றினார்
மாவட்ட கழக தலைவர் ம.சந்திரசேகர், மாவட்ட செயலாளர் ஆ.பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
நிகழ்ச்சியில் தொடக்க உரையாக கழக பேச்சாளர் ரா.அன்புமதி தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்க கொள்கையை ஏற்று மக்கள் மூட நம்பிக்கைகளில் இருந்து விழிப் புணர்வு அடையவேண்டும் என்றும் விரிவாக எடுத்து கூறினார்
தொடர்ந்து கழக சொற்பொழி வாளர் தி.என்னாரெசு பிராட்லா தனது உரையில், சுயமரியாதை இயக்கம் தத்துவங்களையும் மனித நேய கருத்துகளையும் , திராவிட இயக்க ஆட்சியின் சாதனைகளையும் இந்திய அரசியல் சட்டம் அடிப் படை கடமைகள் குறித்தும் விரிவாக எடுத்து அறிவியல் மணப்பான்மை யையோடு நாம் வாழவேண்டும் அறிவியல் சிந்தனைகளை நாம் பரப்ப வேண்டும் என்று விளக்கமாக சிறப்புரை நிகழ்த்தினார்
நிகழ்ச்சியில் மாவட்ட மகளிரணி செயலாளர் ப.கலைச்செல்வி, திலகவதி, தேவிகா, மற்றும் மாவட்ட துணை தலைவர் மு.தமிழ்ச்செல்வம். மாநில மாணவர் கழக துணை செயலாளர் மு.இராகுலன், மாவட்ட தொழிலாளர் அணி செயலா ளர் வெங்கடாசலம், மாநகர அமைப்பாளர் யாழ்.வெங்கடேஷ், பழனியப்பன், திராவிட மணி, இருதயராஜ், கிருஷ்ண மூர்த்தி, ஜெயக்குமார், பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர் அக்ரி நாகராஜ், நீலகிரி யார், ஆனந்தராஜ், ஒன்றிய தலைவர் சிவகுமார், வெற்றி செல்வன், நா குரு மற்றும் ஜீடி நாயுடு நினைவு பெரியார் படிப் பகம் பெரியார் புத்தக நிலையம் காப்பாளர் அ.மு.ராஜா உள்ளிட்ட கழக தோழர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.