சுதந்திர நாட்டில் பிராமணன், சூத்திரன், பறையன், சக்கிலி இருக்கலாமா? அப்படி இருக்கும் நாடு சுதந்திரநாடா? ‘நரக’ நாடா? இதை ஒழிக்கப் பாடுபட இந்த நாட்டில் ஏதாவது உரிமை இருக்கிறதா? உரிமை கேட்க வழி இருக்கிறதா? சுதந்திர நாட்டில் மனித சமுதாயத்தையே அடிமைப்படுத்தி மடையர்களாக ஆக்கி வைத்திருக்கும் இனத்தினர் (பார்ப்பனர்) மந்திரியாய், தலைவராய் இருக்கின்றார்கள் என்றால் இது சுதந்தர நாடாகுமா?
‘விடுதலை’ 15.8.1957
இது சுதந்திர நாடா?
Leave a comment