தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அறிவித்தபடி, காரைக்குடியில் ஆகஸ்ட் 31 ஆம் நாள் கழகம் சார்பில் நடைபெறவுள்ள குன்றக்குடி அடிகளார் நூற்றாண்டு விழா ஏற்பாடு களப்பணிகளில் கழகப்பொறுப்பாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். விழா அழைப்பிதழை தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர். பெரியகருப்பன் ஆகியோரிடம் மாவட்ட காப்பாளர் சாமி.திராவிடமணி, மாவட்ட தலைவர் கு.வைகறை, மாவட்ட செயலாளர் சி. செல்வமணி, இளைஞரணி தோழர் பிரவீன் ஆகியோர் வழங்கினர்.