தந்தை பெரியாரின் 146ஆவது பிறந்தநாளை எழுச்சியோடு கொண்டாடுவதென உரத்தநாடு தெற்கு ஒன்றிய கழக கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு

Viduthalai
2 Min Read

உரத்தநாடு, ஆக. 21- உரத்தநாடு தெற்கு ஒன்றிய திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 18.8.2024 ஞாயிறன்று மாலை 6 மணி அளவில் ஒன்றிய கழக துணைத் தலைவர் நெடுவை கு.நேரு இல்லத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு தெற்கு ஒன்றிய கழக தலைவர் த.ஜெகநாதன் தலைமையேற்றார். தஞ்சை மாவட்ட கழக தலைவர் வழக்குரைஞர் சி. அமர்சிங், மாவட்டச் செயலாளர் அ. அருணகிரி ஆகியோர் முன்னிலை ஏற்றனர்.
அனைவரையும் ஒன்றிய கழக துணைத் தலைவர் கு. நேரு வரவேற்று உரையாற்றினார். கலந்துரையாடல் கூட்டத்தின் நோக்கத்தை விளக்கி திராவிடர் கழகத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா. குணசேகரன் உரையாற்றினார்.

கூட்டத்தில் மாநில ஒருங் கிணைப்பாளர் இரா. ஜெயக்குமார், பெரியார் அறக்கட்டளை உறுப் பினர் கு.அய்யாத்துரை, மாநில கலைத்துறை செயலாளர் தெற்கு நத்தம் ச.சித்தார்த்தன், பெரியார் வீர விளையாட்டு கழக மாநில செயலாளர் நா. ராமகிருஷ்ணன், மாநில ப.க அமைப்பாளர் கோபு. பழனிவேல், மாவட்ட கழக துணை செயலாளர் ஆ.உத்ராபதி, மாவட்ட ப.க.இணைச்செயலாளர் ஆ.லட்சுமணன், மாவட்ட செயலாளர் க.மாரிமுத்து, ஒன்றிய விவசாய அணி தலைவர் கக்கரக்கோட்டை மா. மதியழகன், ஒன்றிய விவசாய அணி செயலாளர் க. அறிவரசு, ஒன்றிய துணைச் செய லாளர் முக்கரை சுடர் வேந்தன், ஒன்றிய இளைஞரணி தலைவர் ரெ. ரஞ்சித் குமார், நெடுவை கு. வைத்திலிங்கம், கு.லெனின், வெ. விமல், ஒக்கநாடு மேலையூர் கிளைக் கழகத் தோழர்கள் நா. வீரத்தமிழன், ப. பாலகிருஷ்ணன், மா. தென்னகம், க. மாணிக்கவாசகம், பெரியார் நகர் இரா. மகேஸ்வரன், வெ. சக்திவேல், கக்கரக்கோட்டை வீர.இளங்கோவன், ஒன்றிய மாணவர் கழக செயலாளர் இர. நிரஞ்சன் குமார், ஒன்றிய மாணவர் கழக தலைவர் க.பரணிதரன், மண்டலக்கோட்டை இரா.மோகன்தாஸ், சுரேந்தர் உள்ளிட்ட கழகத் தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். கூட்டத்தின் தொடக்கத்தில் நெடுவை பெரியார் பிஞ்சு வி.புதியவன் கடவுள் மறுப்பு கூறினார்.

கூட்டத்தில், நெடுவாக்கோட்டை பெரியார் பெருந்தொண்டர் முருகையன் துணைவியாரும் வழக்குரைஞர் வீரமணியின் தாயாருமான பாக்கியம் அம்மையார், நெடுவாக்கோட்டை பெரியார் தொண்டர் ஆறுமுகம் துணைவியார் மணிமேகலை, ஒன்றிய கழக செயலாளர் மாநல். பரமசிவம் சகோதரர் புலவன்காடு ஊராட்சி மன்றத் தலைவர் மாநல். மெய்க்கப்பன் ஆகியோருடைய மறைவிற்கு இக்கூட்டம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது எனவும், உலகத் தலைவர் தந்தை பெரியாரின் 146ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மோட்டார் சைக்கிள் பேரணி ஒக்கநாடு மேலையூரில் தொடங்கி கிளை கழகம் தோறும் கழக கொடியேற்றி மாலை பொய்யுண்டார்கோட்டை செல்லம்பட்டியில் பொதுக்கூட்டம் நடத்துவது எனவும், தந்தை பெரியாரின் 146ஆவது பிறந்த நாளை முன்னிட்டு உரத்தநாடு தெற்கு ஒன்றியம் முழுவதும் உள்ள கிளைகள் தோறும் பகுத்தறிவு பிரச்சார பொதுக்கூட்டங்களை நடத்துவது எனவும், திருச்சி சிறுகனூரில் அமைய உள்ள பெரியார் உலகத்திற்கு ஒன்றிய கழக சார்பில் பெருமளவில் நிதியை திரட்டி தருவது எனவும் முடிவு செய்யப்பட்டது

புதிய பொறுப்பாளர்கள்
உரத்தநாடு தெற்கு ஒன்றிய துணைச் செயலாளர்:
நெடுவை கு. லெனின்.
நெடுவாக்கோட்டை கிளைக் கழகத் தலைவர்:
பெரியார் பெருந்தொண்டர் தோ. தம்பிக்கண்ணு,
செயலாளர்: வெ. விமல்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *