சென்னையில் ஒரே வாரத்தில் குண்டர் சட்டத்தின் கீழ் 23 பேர் சிறை

viduthalai
1 Min Read

சென்னை, ஆக. 20- சென்னையில் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் 26 பேர் சிறையில் அடைக் கப்பட்டனர்.
சென்னையில் குற்றங்களை குறைக்க காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக கொலை, திருட்டு, நகை பறிப்பு, சைபர் குற் றங்கள், வழிப்பறி, நிலம் அபகரிப்பு, கடத்தல், பாலியல் குற்றங்கள் உள்ளிட்ட குற்றங்களில் தொடர்ச்சியாக ஈடுபடுகிற வர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர். இதன்படி கடந்த ஜனவரி மாதம் தொடங்கி ஆகஸ்ட் 18-ம் தேதி வரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் 862 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில், கொலை, கொலை முயற்சி, பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் ஆகிய குற்றங்களில் ஈடுபட்ட 468 பேரும், திருட்டு, வழிப்பறி, பண மோசடி குற்றங்களில் ஈடுபட்ட 133 பேரும், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக 193 பேரும் சிறைக்கு அனுப் பப்பட்டுள்ளனர். இந்த நிலையில், கடந்த 12ஆம் தேதியில் இருந்து 18ஆம் தேதி வரையிலான 7 நாட்களில் சென்னையில் 26 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *