கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீடு அரசியலுக்கு அப்பாற்பட்டது ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் ஒப்புதல் வாக்குமூலம்

2 Min Read

சென்னை, ஆக.20- கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீடு நிகழ்ச்சியை, அரசியலுக்கு அப்பாற்பட்ட பார்வையோடு பார்க்க வேண்டும் என்று ஒன்றிய அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.

ஆய்வுக்கூட்டம்
ஒன்றிய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவ காரங்கள் துறை இணை அமைச்சர் டாக்டர் எல். முருகன் தலைமையில் ஒன்றிய அரசின் ஊடக நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்து தென் மண்டல அளவிலான ஆய்வுக்கூட்டம் நேற்று (19.8.2024) சென்னையில் நடைபெற்றது.
தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஊடக நிறுவனங்களான பத்திரிகை தகவல் அலுவலகம், ஒன்றிய மக்கள் தொடர்பகம், தூர்தர்ஷன், ஆகாசவாணி, ஒன்றிய திரைப்பட சான்றளிப்பு வாரியம் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து அத்துறையின் அலுவலர்களிடம் ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் கேட்டறிந்தார். இதில், ஒன்றிய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் மற்றும் மக்கள் தொடர்பகத்தின் கூடுதல் தலைமை இயக்குநர் எம்.அண்ணாதுரை, ஒன்றிய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் தென்மண்டல தலைமை இயக்குநர் (பொறுப்பு) பழனிசாமி உள்பட பல் வேறு உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

மருத்துவர்களுக்கு பாதுகாப்பு
இதைத் தொடர்ந்து ஒன் றிய அமைச்சர் எல்.முருகன், செய்தியாளர் களிடம் கூறிய தாவது:-
கொல்கத்தாவில் முதுநிலை மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப் பட்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது. கோவையிலும் மருத்துவர் மீது தாக்குதல் நிகழ்வு நடந்துள் ளது. மாநில அரசுகள் மருத்து வர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசியலுக்கு அப்பாற்பட்டது
கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீடு நிகழ்ச்சியை, அரசியலுக்கு அப்பாற்பட்ட பார்வையோடு பார்க்கவேண்டும். இது, தமிழ்நாடு அரசின் சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சி. நாணயம் வெளியிடுவதற்கு ஒன்றிய அரசு அனுமதி அளித்தது. தமிழ்நாடு அரசின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் ஒன்றிய அரசு அனுமதி அளித்த நாணயத்தை ஒன்றிய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டுள்ளார். மெட்ரோ ரயில் முதல் கட்ட திட்டத்துக்கான தணிக்கை கணக்கு விவரங்களை வழங்கினால், 2ஆம் கட்ட திட்டத் துக்கான நிதி ஒதுக்கீடு செய்ய ஒன்றிய அரசு நடவடிக்கை மேற் கொள்ளும். இவ்வாறு அவர் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *