‘விடுதலை’ வை.கலையரசன் தந்தையார் பெ.வைத்தியலிங்கம் மறைவு: தமிழர் தலைவர் இரங்கல்

1 Min Read

அரசியல்

பெரியார் திடல் பணிகளில் பயிலகம், வெளியீட்டுப் பிரிவு, ‘விடுதலை’ பணிமனை உள்ளிட்ட  பல்வேறு துறைகளில் கடந்த 25 ஆண்டுகளாக பணியாற்றி வருப வரும், ஆவடி மாவட்ட திராவிடர் கழகத் துணைத் தலைவருமான தோழர் வை.கலையரசன் அவர்களின் தந்தையார் பெ.வைத்தியலிங்கம் (வயது 87) அவர்கள் இன்று  (10.8.2023) அதிகாலை  அரியலூர் மாவட்ட உல்லியக் குடியில் மறைவுற்றார் என்ற செய்தி அறிந்து வருந்துகிறோம். 

தோழர் கலையரசன் முழுமையாக இயக்கத் தொண் டுக்குத் தன்னை ஒப்படைத்துக் கொள்ள இடையூறின்றி அனுமதித்த அவர்தம் தந்தையாரும், குடும்பத்தினரும் நமது நன்றிக்கும், பாராட்டுக்கும் உரியவர்கள்.

தந்தையாரை இழந்துவாடும் கலையரசன் – அவரது குடும்பத்தினருக்கும், தோழர்களுக்கும் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம். 

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

10.08.2023
சென்னை

(குறிப்பு: அவரது இறுதி நிகழ்வு அரியலூர் மாவட்டம் உல்லியக்குடியில் இன்று மாலை 3 மணியளவில் நடைபெறுகிறது. தொடர்புக்கு:  9843207493).

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *