தலைமைச்செயலாளராக நா.முருகானந்தம் நியமனம்

Viduthalai
1 Min Read

சென்னை, ஆக.19 தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலராக இருந்த சிவ்தாஸ் மீனா தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத் தலைவராக நியமிக் கப்பட்டதையடுத்து முதலமைச்சரின் தனிச் செயலராக இருந்த நா.முரு கானந்தம் புதிய தலைமைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் வெளியான ஒரு சில நிமிடங்களிலேயே நா.முருகானந்தம் புதிய தலைமைச் செயலராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவர் தமிழ்நாட்டின் 50ஆவது தலை மைச் செயலர் என்ற தகுதியைப் பெறுகிறார்.
1991ஆம் ஆண்டு அய்ஏஎஸ் பிரிவைச் சேர்ந்த முருகானந்தம் தமிழ்நாடு அரசின் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்தவர். சென்னையை சேர்ந்த இவர், திரு நெல்வேலி மாவட்டத்தில் சார் ஆட்சியராக தனது பணியை தொடங்கினார்.

தமிழ்நாட்டில் கட்டடடங்கள், மனைப்பிரிவு திட்டங்களை ஒழுங்குபடுத்துவதற்காக தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் தொடங்கப்பட்டது. இந்த ஆணையம் தொடங்கப்பட்ட நிலையில், முதல் தலைவராக 2019-ஆம் ஆண்டு பிப்.8-ஆம் தேதி மேனாள் தலைமைச் செயலர் கே.ஞானதேசிகன் நியமிக்கப்பட்டார். அவரது பதவிக் காலம் இந்த ஆண்டு பிப்.10-ஆம் தேதி முடிவடைந்தது.
இந்நிலையில், புதிய தலைவரை தேர்வு சேய்வதற்கான தேர்வுக்குழு அமைக்கப்பட்டது.

இக்குழு, கடந்த ஜூலை மாதம் தனது பரிந்துரையை அளித்தது. அந்த பரிந்துரைகளை கவனமாக பரிசீலித்த தமிழ்நாடு அரசு, ஆளுநரின் ஒப்புதலை பெற்று, தற்போது தலைமைச் செயலராக உள்ள சிவ்தாஸ் மீனாவை தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக நியமிக்க முடிவு செய்தது. இதனைத் தொடர்ந்து தலைமைச் செயலராக இருந்த சிவதாஸ் மீனா, நேற்று (18.8.2024) தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டார்.
இந்த மாற்றதைத் தொடர்ந்து இன்று (19.8.2024) நா.முருகானந்தம் புதிய தலைமைச் செயலராக தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *