வீடு தேடி வரும் அலுவலர்கள் மூலம் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யலாம்

1 Min Read

 சென்னை,ஆக.10 – 1.1.2024-அய் தகுதியேற்படுத்தும் நாளாகக்கொண்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தினை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, வாக்காளர்களை சரிபார்க்க அந்தந்த பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் வீட்டுக்கு வீடு சரிபார்ப்புப் பணி கடந்த மாதம் 21-ஆம் தேதி தொடங்கியது. வருகிற 21-ஆம் தேதி வரை இந்த பணி நடக்கிறது.

இந்த பணியின்போது வாக்குச்சாவடி அலுவலர்கள் ஒவ்வொரு வீட்டிலும் பதிவு செய்யப்பட்ட அனைத்து வாக்காளர்களின் விவரங்களையும் சரி பார்ப்பார். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விரும்புபவர்கள், வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்குதல், திருத்தம், முகவரி மாற்றம், ஆதார் எண் இணைப்பு போன்றவற்றை வீடு தேடி வரும் வாக்குச்சாவடி அலுவலர் மூலம் மேற் கொள்ளலாம். 1.10.2023 அன்று 18 வயது பூர்த்தியடை பவர்களும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம். பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். -இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *