சென்னை, ஆக. 19- மதிமுக தலைமை அலுவலகத்தில் 17.08.2024 அன்று மாலை 4.00 மணி அளவில் நீட் எதிர்ப்பு கருத்தரங்கம் மதிமுக மாணவர் கழக மாநில செயலாளர் பால. சசிகுமார் தலைமையில் நடைபெற்றது.
கருத்தரங்கத்தில் திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் இரா.செந்தூரபாண்டியன் கருத்துரை யாற்றினார். மேலும் SFI மாநிலச் செயலாளர் கோ.அரவிந்த்சாமி, AISF மாநில துணைத் தலைவர் சினேகா, RSF மாநிலத் துணைச் செயலாளர் தயா. நெப்போலியன், மனித நேய ஜனநாயக கட்சி மாநிலத் துணைச் செயலாளர் அசாருதீன், SMI மாநிலச் செயலாளர் கோவை அக்மத் ஆகியோரும் கருத்துரை வழங்கி சிறப்பித்தனர்.
கருத்தரங்கத்தில் திராவிடர் கழக துணை பொதுச் செயலாளர் சே.மெ.மதிவதனி, வி.சி.க துணைப் பொதுச்செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ், திமுக மாணவர் அணி மாநில செயலாளர், சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன், மதிமுக பொருளாளர் செந்திலதிபன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தில் திராவிட மாணவர் கழகம் சார்பில் சட்டக் கல்லூரி திராவிட மாணவர் கழக மாநில அமைப்பாளர் மு.இளமாறன், திராவிட மாணவர் கழகத் துணைச் செயலாளர் தொண்டறம், அவனிக்கோ இளந்திரையன், பெ. நிலவரசி, அபினா சுருதி ஆகியோர் பங்கேற்றனர்.
குறிப்பு : மதிமுக மாணவரணி நடத்திய மாநில அளவிலான “நீட் – கல்லூரி மாணவர்களின் எதிர்குரல்” கட்டுரைப் போட்டியில் திராவிட மாணவர் கழக சட்டக் கல்லூரி மாநில அமைப்பாளரும், விழுப்புரம் அரசு சட்டக் கல்லூரி மாணவருமான மு.இளமாறன் முதல் இடம் பெற்று பரிசு தொகை ரூ 15,000 மற்றும் புத்தகம், பாராட்டு சான்றிதழை மதிமுக பொருளாளர் செந்திலதிபன் அவரிடமிருந்து பெற்றுக் கொண்டார்.