நியாயவிலைக் கடைகளில் இனி பாமாயிலுக்கு பதில் தேங்காய் எண்ணெய்

1 Min Read

சென்னை, ஆக. 19- தமிழ்நாடு அரசு உணவுப் பங்கீடு அட்டைகளுக்கு வழங்கப்படும் பாமாயி்ல் எண்ணெய்க்கு பதிலாக தேங்காய் எண்ணெயாக வழங்க திட்டமிட்டுள்ளது.
குறிப்பாக கோவை, நீலகிரி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் முதல்கட்டமாக இது செயல்படுத்தப்படும்.
நியாயவிலைக் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக உள்ளது. இதனால் தேங்காய் விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது அரசு இதுகுறித்த கருத்து கேட்கப்பட்டு வருகிறது. அதிகமானோர் தேங்காய் எண்ணெய் வழங்க ஆதரவு தெரிவித்துள்ளனர்.
மேலும் விரைவில் தேங்காய் அல்லது கடலை எண்ணெய் நியாயவிலைக் கடைகளில் வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *