தமிழ்நாடு அரசுக்கு கொடுத்த நிதியை திரும்பப் பெற்ற ஒன்றிய பிஜேபி அரசு

Viduthalai
1 Min Read

சென்னை, ஆக 10 ஒன்றுமில்லாத காரணங்களைக் கூறி மின்வாரியத்துக்கு வழங்கப்பட்ட ரூ.4 கோடி நிதியை ஒன்றிய அரசு திரும்பப் பெற்றுள்ளது.

நாடு முழுவதும் மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துவதற்காக குறைந்த அளவு மின்சாரத்தில் இயங்கும் எல்இடி பல்ப், டியூப்லைட் உள்ளிட்ட மின் சாதனங்களை பயன்படுத்துமாறு மக்களை ஒன்றிய அரசு அறிவுறுத்தி வருகிறது. மேலும், இப்பணிகளை மருத்துவமனைகளில் மேற்கொள் ளும் போது மாநில அரசுகளுக்கு நிதியுதவியும் செய்கிறது. 

கன்னியாகுமரி, தருமபுரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் 159 ஆரம்ப சுகாதார நிலையங்கள், கன்னியாகுமரி, தருமபுரி, சிவகங்கை ஆகிய மாவட்டங் களில் 103 அரசுப் பள்ளிகளில் 9 வாட்ஸ் திறனில் 740 எல்இடி பல்ப், 20 வாட்ஸ் திறனில் 7,500 எல்இடி டியூப் லைட் மற்றும் 5,200 மின்விசிறி ஆகியவற்றைப் பொருத்த இந்த ஆண்டு தொடக்கத் தில் தமிழ்நாடு மின்வாரியம் முடிவு செய்தது. ஒப்பந்தப்புள்ளி: இதற்காக, ஒப்பந்தப்புள்ளி கோரப் பட்டது. இதில் 2 நிறுவனங்கள் பங்கேற்றன. ஆனால், தகுதியான நிறு வனத்தைத் தேர்வு செய்து பணிகள் வழங்கப்படவில்லை. அத்துடன், திட்ட மிட்டபடி கடந்த மார்ச்மாதத்துக்குள் பணிகள் தொடங்கப் படவில்லை. இதையடுத்து, இத்திட்டப் பணிகளுக்கு வழங்கப்பட்ட ரூ.4 கோடியை, மத்திய மின்துறையின் மின் சிக்கன நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. விரைவில் மீண்டும் ஒப்பந்தப்புள்ளி பெறப்பட்டு, ஒன்றிய அரசிடம் இருந்து மீண்டும் நிதியுதவியைப் பெற்றுஇதற்கான பணிகள் தொடங்கப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *