கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 19.8.2024

1 Min Read

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை புறக்கணிக்கும் யுபிஎஸ்சி: லேட்டரல் என்ட்ரி மூலம் அரசு உயர் பதவிகளுக்கு ஆட்தேர்வு நடத்துவதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* அய்.ஏ.எஸ். பதவிகளை தனியார் மயமாக்கி, இட ஒதுக்கீட்டை முற்றிலும் ஒழிப்பது தான் ‘மோடியின் காரண்டி’ என ராகுல் கடும் கண்டனம்.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* இந்தியாவின் தேசிய ஆளுமை கலைஞர். தமிழ்நாடு மேனாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மறைந்த கலைஞரின் நூற்றாண்டு விழாவைக் குறிக்கும் நினைவு நாணயத்தை வெளியிட்டு ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் புகழாரம்.
தி இந்து:
* யு.பி.எஸ்.சி. ஆட்சேர்ப்பில் பக்கவாட்டு நுழைவுக்கு எதிராக நாடு தழுவிய இயக்கத்திற்கு அகிலேஷ் அழைப்பு; இந்த தேர்வு முறை இன்றைய அதிகாரிகள் மற்றும் இளைஞர்கள் நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் உயர் பதவிகளை அடைவதற்கான கதவுகளை மூடும் என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் குற்றச்சாட்டு.

– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *