வீரன் கையில் வாளுடன் நடுகல்-தேனி மாவட்டத்தில் கண்டுபிடிப்பு

1 Min Read

தேனி, ஆக.19 தேனி மாவட்டம், தேவாரத்தில் 17-ஆம் நூற்றாண்டு காலத்து நடுகல் கண்டறியப்பட்டது. தேவாரத்தில் போடி ஏலக்காய் விவசாயிகள் சங்கக் கல்லூரி முதல்வா் எஸ்.சிவக்குமார், வரலாற்றுத் துறை இணைப் பேராசிரியா் சி.மாணிக்கராஜ், ஓடைப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியா்கள் பிரகாசம், அகிலன், கல்லூரி மாணவா்கள் ரேவன், தனுஷ் ஆகியோர் ஆய்வு நடத்தினா். இதில், 17-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்ததாகக் கருதப்படும் நடுகல் கண்டறியப்பட்டது.

இது குறித்து இணைப் பேராசிரியா் சி.மாணிக்கராஜ் கூறியதாவது: கி.பி 11,12-ஆம் நூற்றாண்டுகளில் தேவாரம் என்பது தேவராபன் நல்லூா் என்ற பெயரில் அழைக்கப்பட்டது. இந்த ஊருக்கு தாழ்வாரம் என்ற பெயரும் வழக்கில் இருந்தது. தேவாரத்தில் சந்தைத் தெரு அருகே உள்ள பிரம்புக்கட்டி என்று அழைக்கப்படும் நீரோடையில் 5 அடி உயரம், ஒன்றரை அடி அகல நடுகல் கண்டறியப்பட்டது. இதில் வீரன் வலது கையில் வாளும், இடது கையில் துப்பாக்கியும் பிடித்து, இடையணியில் குறுவாள் சொருகி நின்றவாறு புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. இதில் வலப் பக்கமாக சாய்ந்து, முடிந்து கட்டப்பட்ட கொண்டை, காதணியுடன் இரு பெண்கள் தங்களது கைகளை உயா்த்தியபடி காணப்படுகின்றனா்.
நடுகல்லில் காணப்படும் வீரன் இந்தப் பகுதியில் நிகழ்ந்த சண்டையில் இறந்த பிறகு, அவரது இரு மனைவிகளும் உடன்கட்டை ஏறி உயிர் நீத்தனா் என்பதைக் காட்டும் வகையில் செதுக்கப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *