கடந்த மே மாதம் 13 ஆம் தேதி நடைபெற்ற ஈரோடு பொதுக்குழுவில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், 365 நாளும், 24 மணி நேரமும் (அதாவது தூங்கும் நேரம் தவிர) தமிழ்நாடெங்கும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறைகள் நடக்க வேண்டும் என அறிவிப்பு செய்தார்! அதனையொட்டி மே 27 சென்னை பெரியார் திடலில் தொடங்கி கீரமங்கலம், தஞ்சாவூர், நீடாமங்கலம், திருநாகேஸ்வரம், செந்துறை, கல்லூர், குற்றாலம், திருவாரூர், நத்தம், இலால்குடி, துறையூர், சேந்தநாடு, கள்ளக்குறிச்சி, பட்டுக் கோட்டை, கந்தர்வகோட்டை, நடுவீரப்பட்டு முடிந்து, 18 ஆவது மாவட்டமாக 06.08.2023 அன்று மயிலாடுதுறையில் நடைபெற்றது. காலை 9.30 மணிக்கெல்லாம் 115 மாணவர் களுடன் அரங்கம் நிறைந்திருந்தது. இதில் பெண்கள் 72, ஆண்கள் 43.
தலைமையும்! முன்னிலையும்!
நிகழ்ச்சி தொடக்கத்தில் மாவட்டச் செயலாளர் கி.தளபதி ராஜ் வரவேற்புரை ஆற்றினார். மாவட்டத் தலைவர் கடவாசல் குணசேகரன் தலைமை வகித்தார். மாவட்ட அமைப்பாளர் ஞான.வள்ளுவன், மாவட்டத் துணைத் தலைவர் வெ.அன்பழகன், குத்தாலம் ஒன்றியத் தலைவர் சா.முருகையன், மாவட்டத் துணைச் செயலாளர் அரங்க.நாகரத்தினம், நகரத் தலைவர் சீனி.முத்து, ஒன்றியத் தலைவர் ஆர்.டி.வி.இளங்கோவன், கொள்ளிடம் ஒன்றியத் தலைவர் பி.பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமைக் கழக அமைப்பாளர் சு.கிருஷ்ணமூர்த்தி தொடக்கவுரையாற்றினார்.
தலைப்பும்! வகுப்பும்!
“பெரியார் ஒர் அறிமுகம்” என்கிற தலைப்பில் பூவை. புலிகேசி, “பெரியாரின் பெண்ணுரிமைச் சிந்தனைகள்” எனும் தலைப்பில் பேராசிரியர் மு.சு.கண்மணி, “தந்தை பெரியாரும், ஜாதி ஒழிப்பும்” என்கிற தலைப்பில் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், “ஊடகத் துறையில் தடம் பதித்த திராவிடர் இயக்கம்” எனும் தலைப்பில் வி.சி.வில்வம், “தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் சாதனைகள்” என்கிற தலைப்பில் முனைவர் அதிரடி அன்பழகன், “பார்ப்பனப் பண்பாட்டுப் படையெடுப்புகள்” எனும் தலைப்பில் முனைவர் துரை.சந்திரசேகரன் ஆகியோர் வகுப்பெடுத்தனர்.
தமிழ்நாட்டை உலகத்தோடு ஒப்பிடுங்கள்!
பெரியார் ஓர் அறிமுகம் எனும் தலைப்பில் பூவை. புலிகேசி பேசும்போது, ‘இதயம் பேசுகிறது’ இதழின் ஆசிரியர் மணியன் அவர்கள் அமெரிக்கா சென்ற போது, “இந்தியாவில் புரட்சி செய்தவர்கள் யார்?”, என்கிற கேள் விக்கு அமெரிக்கப் பேராசிரியர் ஜான் ரைலி, “மதிக்கத்தகுந்த தலைவர் ஈ.வெ.இராமசாமி என்று கூறியிருக்கிறார். மணியன் அவர்களுக்கு அதிர்ச்சியுடன், “இது உங்கள் தனிப்பட்ட கருத்தா?”, என்று கேட்டபோது, “அமெரிக்காவின் பெரும் பாலான பேராசிரியர்களின் கருத்து இது”, என்று ஜான் ரைலி கூறியிருக்கிறார்.
நூலகத்தில் ஆய்வு செய்தும், பெரியளவிற்கு நூல்கள் வாசித்தும் எதையும் உருவாக்கவில்லை பெரியார். எதார்த்த உண்மைகளை, அனுபவ அறிவின் மூலமும், சுய சிந்தனை யின் தம் கொள்கைகளை வகுத்தவர் பெரியார். இன்றைக்குத் தமிழ்நாட்டை உலக அளவில் ஒப்பிடுவதற்குக் காரணமே தந்தை பெரியாரின் கொள்கைகள் தான் என்று பூவை. புலிகேசி பேசினார்.
சைவ சிறப்பை மாற்றி அமைத்தவர் பெரியார்!
“தந்தை பெரியாரின் பெண்ணுரிமைச் சிந்தனைகள்” எனும் தலைப்பில் பேராசிரியர் மு.சு.கண்மணி பேசும்போது, பெண்களுக்கான சொத்துரிமை, கல்வி உரிமை, வேலை வாய்ப்பு உரிமை வந்துவிட்டாலும், அரசியலில் ஈடுபடுவதில் இன்னும் தயக்கம் இருக்கிறது. ஆனால் அந்தக் காலத்தி லேயே இணையர் நாகம்மையார், தங்கை கண்ணம்மாள் ஆகியோரை அரசியலில் ஈடுபடுத்தியும், போராட்டங்களில் பங்கு பெற செய்தும் முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர் பெரியார். அவர் வீட்டில் சைவ உணவே மதிப்பாக இருந்த காலத்தில், அசைவ உணவுகளில் ஈடுபாடு காட்டி “சைவ சிறப்பை” மாற்றி அமைத்தவர்.
அதேபோல மறுமணம் செய்வது வைப்பதில் இன்றைக்கும் ஒரு தயக்கம் இருக்கிறது. தங்கை மகளுக்கு அன்றே மறுமணம் செய்து புரட்சி செய்தவர் பெரியார். சுயமாகச் சிந்திக்கக் கூட பெண்களுக்கு வாய்ப்பை மறுத்தது இந்து மதம். அதை அடியோடு மாற்றியவர் பெரியார். இந்து மதம் வலியுறுத்தும் குழந்தைத் திருமணத்தை ஒழித்த தெல்லாம் மாபெரும் சாதனை என்றே சொல்ல வேண்டும். உயர்கல்வி படிப்பதும், உலகளவில் தமிழ்ப் பெண்கள் பணிபுரிவதும், இதோ… பயிற்சி முகாமில் வந்து கேட்கும் சூழலும், குழந்தைத் திருமணத்தை நிறுத்தியதால் கிடைத்த பயன்கள். பெரியாரின் சிந்தனையைக் கைக்கொண்டு, பெண்கள் மேலும், மேலும் முன்னுக்கு வர வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
பள்ளிக் கூடத்தில் ஜாதி கேட்பது ஏன்?
தந்தை பெரியாரும், ஜாதி ஒழிப்பும் என்கிற தலைப்பில் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் பேசும்போது, ஜாதி என்றால் என்ன? ஜாதி என்கிற வார்த்தைகளை எந்தெந்த இடங்களில் கேள்விப்பட்டுள்ளீர்கள் எனக் கேட்டார். பள்ளிகளில், திருமண வீடுகளில், தேர்தல் நேரங்களில் கேள்விப்பட்டுள்ள தாக மாணவர்கள் பதிலளித்தனர். பள்ளிகளில் ஜாதி கேட்பது உண்மைதான். அதேநேரம் “ஜாதி பார்த்து தான் வகுப்பறை யில் உட்கார வைக்கிறார்களா?”, என்ற போது, “இல்லை” என மாணவர்கள் தலையசைத்தனர்.
தொழில் அடிப்படையில் தான் ஜாதிகள் இருக்கிறது என்பார்கள். மீன்பிடித்தால் மீனவர், விவசாயம் பார்த்தால் விவசாயி, மண்பாண்டம் செய்தால் குயவர், செருப்பு தைத்தால் அருந்ததியர் என்று கூறுவார்கள். அப்படியெனில் இவர்களில் சிலர் மருத்துவர், வழக்குரைஞர், அய்.ஏ.எஸ், நடிகர் என்று தங்கள் திறமையால் உருவானால், இவர்களை என்ன ஜாதியிட்டு அழைப்பது? அந்தத் தொழில்களுக்கு ஜாதி இருக்கிறதா? ஆக தொழில் அடிப்படையில் வருவதல்ல ஜாதி; பிறப்பின் அடிப்படையில் வருவதே ஜாதி.
பிறக்கும் போதே ஒருவர் உயர்ந்த ஜாதி, மற்றவர் தாழ்ந்த ஜாதி எனத் தீர்மானித்து விட்ட பிறகு, தொழில் முறை எங்கிருந்து வருகிறது? சாதாரண ஒரு வெள்ளை நூல், அதைப் பூணூல் என்கிறார்கள். கொஞ்சம் விரிவாக புனித நூல் என்கிறார்கள். ஒரு ரூபாய் பெறாத அந்த நூலை நாம் போட முடியுமா? பிறப்பின் அடிப்படையில் உயர்ந்த ஜாதி என்பதால் நாங்கள் மட்டுமே போடுவோம் என்கிறார்களே? பிறப்பில் உருவாகும் ஜாதி, இறப்பு வரை நீண்டு, இறந்த பிறகும் சுடுகாடு வருகிறதே? அதனால் தானே ஜாதியைப் பிறவி இழிவு என்றார் பெரியார் என பிரின்சு என்னாரெசு பெரியார் பேசினார்.
ஆசிரியர் வீரமணி அவர்களைப் படியுங்கள்!
“தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் சாதனைகள்” எனும் தலைப்பில் முனைவர் அதிரடி. அன்பழகன் பேசும்போது, சிறு வயது முதலே இயக்கக் கொள்கையால் ஈர்க்கப்பட்டு சமூகத் தொண்டாற்ற வந்தவர் ஆசிரியர் கி.வீரமணி. அவ்வயதிலேயே அறிஞர் அண்ணா அமர்ந்திருந்த மேடையில் அனைவரும் வியக்கும் வண்ணம் பேசியவர். இயக்கத் தொண்டு, மேடைப் பேச்சு ஒருபுறம் இருந்தாலும் கல்வியிலும் சிறந்து விளங்கியவர். தனிப்பட்ட வாழ்வில் எத்தனையோ பணிகள், பதவிகள் பெற வாய்ப்பிருந்தும், தந்தை பெரியார் தலைமையில், அவர் கொள்கையில் இன்றைக்கும் தமிழ்நாட்டின் நலம் பேண உழைத்து வருபவர்.
அவர்தம் மொத்த வாழ்வில் 90 விழுக்காட்டை இந்தச் சமூகத்திற்காய் வழங்கியவர். ஒரு நாளில் அவர் செய்யும் பணிகள் என்பது வியப்பிற்குரியது. மாணவர்கள் அவற்றைத் தெரிந்து கொள்ள வேண்டும். ஆசிரியர் குறித்து நீங்கள் படிக்க வேண்டும். வியப்பின் மறுபெயர் வீரமணி என்பார் கள். அவரின் உழைப்பு, நினைவாற்றல், சுறுசுறுப்பு, எழுத் தாற்றல், பேச்சாற்றல், விரைவான கற்றல் திறன், அணுகு முறைகள், பிறரை மதிக்கும் தன்மை என ஒவ்வொன்றும் மாணவர்களுக்கு ஒரு பாடமாக இருக்கும்.
விடுதலை நாளிதழில் அவர் எழுதும் “வாழ்வியல் சிந்தனைகள்” எனும் பகுதி பன்முகத் திறன் கொண்டது. அறிவியல், மருத்துவம், நூல் மதிப்புரை, சுயமுன்னேற்றம் என அவர் எழுதிடாத துறைகளே இல்லை. அவையெல்லாம் நம்மை உயர்த்திடும் மேம்பட்ட சிந்தனைகள். திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எதிலும் முன்னோடி என்பதற்கும், அவர்கள் நமக்கான வழிகாட்டி என்பதற்கும் ஆயிரம் உதாரணங்கள் உண்டு. அவசியம் ஆசிரியர் குறித்து மாணவச் செல்வங்கள் நீங்கள் படிக்க வேண்டும்,” என அதிரடி அன்பழகன் பேசினார்.
காலம் காலமாகப் பொய் பேசுபவர்கள்!
“பார்ப்பனப் பண்பாட்டுப் படையெடுப்பு” எனும் தலைப்பில் முனைவர் துரை.சந்திரசேகரன் பேசும் போது, நல்ல தமிழ்ப் பெயரை நாம் சூட்டிக் கொள்ள வேண்டும். நமக்கு சமஸ்கிருதப் பெயர் இருந்தாலும், பிற்காலத்தில் நம் பிள்ளைகளுக்குச் சூட்டி மகிழ வேண்டும். “நல்ல தமிழ்ப் பெயரைப் பிள்ளைக்குச் சூட்டுங்கள், நானொரு தமிழ னென்று அடையாளம் காட்டுங்கள்”, என ஒரு கவிஞர் பாடினார். நமது வீடுகளில் நடைபெறும் திருமணங்களில் நம் தமிழ்மொழி கிடையாது. பார்ப்பனர்களின் தாய்மொழி யில் நாம் ஏன் திருமணம் செய்து கொள்ள வேண்டும்?
தமிழர் வீடுகளில் பார்ப்பனர்களை வைத்துத் திருமணம் செய்வது தான் அதிகமாக இருக்கிறது. அவர்கள் செய்யும் முறைகள், சொல்லும் மந்திரங்கள் அனைத்துமே நம் சுயமரியாதையைப் பாதிப்பதாகவே இருக்கிறது. நம் வீட்டு நிகழ்ச்சிகளில் பார்ப்பனர்களை அழைத்து பணம் கொடுத்து, சாமி என்று மரியாதைக் கொடுத்து, நம்மை நாமே ஏன் கேவலப்படுத்திக் கொள்ள வேண்டும்? உங்களுக்குத் திருமணம் செய்து வைக்கும் தகுதி எங்களுக்குத்தான் இருக்கிறது. அந்தத் தகுதியை ஆண்டவன் எங்களுக்குக் கொடுத்திருக்கிறான் எனக் காலம் காலமாகப் பொய் பேசி வருபவர்களே பார்ப்பனர்கள்”, என முனைவர் துரை.சந்திர சேகரன் பேசினார்.
பாராட்டும்! சான்றிதழும்!
பயிற்சிப் பட்டறைக்கு வருகை புரிந்த மயிலாடுதுறை காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.இராஜ்குமார் அவர் கள் மாணவர்களைப் பாராட்டிப் பேசினார். நிறைவு விழாவிற்கு வருகை புரிந்த திமுக மாவட்டச் செயலாளரும், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம்.முருகன் அவர்கள் மாணவர்களுக்குச் சான்றிதழ் மற்றும் நூல்கள் வழங்கி வாழ்த்துரை வழங்கினார்.
திராவிடர் கழக ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், பயிற்சிப் பட்டறையை ஒருங்கிணைத்து, பங்கேற்ற மாணவர் களையும், ஏற்பாடு செய்த தோழர்களையும் பாராட்டி உரை யாற்றினார். பயிற்சிப் பட்டறையில் சிறப்பாக குறிப்பெடுத்த 6 மாணவர்களுக்குப் புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன. நிறைவாக அனைவரும் இணைந்து குழுப்படம் எடுத்துக் கொண்டனர்
நிகழ்வில் பெரியார், அம்பேத்கர் குறித்து ஒரு மாணவர் கவிதை வாசித்தார். மாவட்ட அமைப்பாளர் ஞான.வள்ளுவன், இயக்கம் குறித்து எளிதான 15 கேள்விகளை மாணவர்களிடம் கேட்டு, பதில் சொன்னவர்களுக்கு நூல்கள் வழங்கினார். மாவட்டத் துணைத் தலைவர் அன்பழகன் அன்றைய நாள் முழுவதும் தேநீர், உணவுகள் கொடுத்து மகிழ்ந்தார்.
இந்நிகழ்ச்சியில் கொள்ளிடம் ஒன்றியச் செயலாளர் பூ.பாண்டுரங்கன், குத்தாலம் ஒன்றியச் செயலாளர் கு.இள மாறன், சீர்காழி ஒன்றியச் செயலாளர் எஸ்.பி.செல்வம், குத்தாலம் நகரத் தலைவர் சா.ஜெகதீசன், குத்தாலம் ஒன்றியச் துணைச் செயலாளர் தி.சபாபதி, மயிலாடுதுறை நகரத் துணைத் தலைவர் இரெ.பித்தன், மாவட்டப் பகுத்தறிவாளர் கழகத் தலைவர் அ.சாமிதுரை, நகரப் பகுத்தறிவாளர் கழகத் தலைவர் க.செல்வராஜ், மாவட்ட இளைஞரணி தலைவர் க.அருள்தாஸ், ஜி.கே. மணிவேல், பி.இராஜேந்திரன், இரா.செல்லத்துரை, நாத்திக பொன்முடி, சோழிங்கநல்லூர் ப.க. அமைப்பாளர் ஜெயராமன் உள்ளிட்டோர் கலந்து கொண் டனர். நகரச் செயலாளர் பூ.சி.காமராஜ் நன்றி கூறினார்.
தொகுப்பு: வி.சி.வில்வம்
என் திருமணத்திற்குப் பார்ப்பனரை அழைக்கமாட்டேன்!
“பல்வேறு போட்டித் தேர்வுகள், நுழைவுத் தேர்வுகளுக்குச் சென்றுள்ளேன். ஆனால் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை எனும் இந்த வகுப்புகள் வித்தியாசமாக இருந்தது. நிறைய கற்றுக் கொண்டேன்”, என ஒரு மாணவி பேசினார். “பெரியார், அம்பேத்கர் இருவரும் மாபெரும் தலைவர்கள் என்பதைப் புரிந்து கொண்டேன். அவர்களின் கருத்துகளையும் அறியும் வாய்ப்பைப் பெற்றேன்” என ஒரு மாணவர் பேசினார். “பார்ப்பனர்கள் குறித்தும், சம்ஸ்கிருத மந்திரங்கள் குறித்தும் அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். என் திருமணத்திற்குக் கட்டாயம் நான் பார்ப்பனரை அழைக்க மாட்டேன்” என ஒரு மாணவி பேசினார். “திராவிடர் கழகம் என்றால் அரசியல் பேசுவார்கள் என்று நினைத்தேன். பல யோசனையில் தான் பெயர் கொடுத்தேன். தொடர்ந்து என் நண்பர்கள் 5 பேரும் பெயர் கொடுத்தார்கள். இங்கு வந்த பிறகு தான் இவ்வளவு விசயங்கள் இருக்கிறதா என வியந்து போனேன்” என்றார் மற்றொரு மாணவி.