சென்னை, ஆக. 18- நடப்பிலுள்ள வாக்காளா் பட்டியல் விவரங்களை வீடு வீடாக சரிபாா்க்கும் பணி வரும் 20-ஆம் தேதி தொடங்கவுள்ளது. செப். 18 வரை அந்தப் பணி நடைபெற இருப்பதாக தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளாா்.
இதைத் தொடா்ந்து வரைவு வாக்காளா் பட்டியல் அக். 29-ஆம் தேதி வெளியிடப்படும் எனவும், பட்டியலில் பெயா் சோ்க்க, நீக்க விண்ணப்பங்களை நவ. 28 வரை அளிக்கலாம் எனவும் அவா் நேற்று (16.8.2024) வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.
விண்ணப்பங்கள் அனைத்தும் டிச. 24-க்குள் இறுதி செய்யப்பட்டு, இறுதி வாக்காளா் பட்டியல் அடுத்த ஆண்டு ஜன. 6-ஆம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளாா்.
வாக்காளா் விவரம் ஆக. 20 முதல் வீடு வீடாக சரிபாா்ப்பு
Leave a comment