நேற்று (17.8.2024) தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் கிண்டி கத்திப்பாரா சந்திப்பு சாலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியினைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மேலாணமை இயக்குநர் எம்.ஏ.சித்திக், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் ஜெ.குமரகுருபரன், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை செயலாளர் டாக்டர் ஆர்.செல்வராஜ், துணை ஆணையாளர் (பணிகள்) வி.சிவகிருஷ்ணமூர்த்தி, தெற்கு வட்டார துணை ஆணையாளர் எம்.பி.அமித், தலைமைப் பொறியாளர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.