திருப்பத்தூர், ஆக. 18- திருப்பத்தூர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 16.8.2024 அன்று மாவட்ட தலைவர் கே.சி.எழிலரசன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ஆசிரியர் அவர்களின் வழிகாட்டலின்படி தமிழ்நாடு முழுவதும் 100 இடங்களில் நடைபெறும் மூட நம்பிக்கை ஒழிப்பு – பெண்ணுரிமை பாதுகாப்பு, இந்திய அரசியல் சட்டம் 51 A (h) விளக்கப் பொதுக்கூட்டங்களை பெரியார் சமத்துவபுரம், சந்திர புரம் (பனந்தோப்பு), சோலையார்பேட்டை, கந்திலி ஒன்றியததில் நடத்தமுடிவு செய்யப்பட்டது.
அதன் பொருட்டு திருப்பத்தூர் மாவட்டம் சார்பில் கந்திலி ஒன்றியம் சமயபுரம் பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் பெ. ரா. கனகராஜ் கந்திலி ஒன்றிய தலைவர் மற்றும் இரா. நாகராசன் கந்திலி ஒன்றிய செயலாளர் ஆகியோர் தலைமையில் மாநில பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் அண்ணா.சரவணன், மாநில மகளிரணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, கழக பேச்சாளர் புவனகிரி யாழ் திலீபன் ஆகியோரின் சிறப்புரையில், திராவிடர் கழக, தோழமை இயக்க தோழர்கள் முன்னிலையில் 23.8.2024 வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் நடத்தி பகுத்தறிவு பிரச்சாரத்தை மேற்கொள்வது என்றும்.
மேலும், பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 146ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பகுத்தறிவாளர் கழகம் சார்பில் கல்லூரிகளுக்கிடையேயான பேச்சுப் போட்டி சி.தமிழ்ச்செல்வன் (மாவட்ட தலைவர் பகுத்தறிவாளர் கழகம்), வே. அன்பு (மாவட்டச் செயலாளர் பகுத்தறிவாளர் கழகம்) ஆகியோர் தலைமையில் 28.8.2024 புதன்கிழமை தூயநெஞ்சக் கல்லூரி ஓயேயஸ் அரங்கில் நடத்துவது என்றும். பேச்சுப் போட்டியில் முதல் மூன்று இடங்களில் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ. 3000, இரண்டாம் பரிசு ரூ.2000, மூன்றாம் பரிசு ரூ.1000 வழங்கி சிறப்பித்து அவர்களை செப்டம்பர் 7, 8 அன்று சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான பேச்சுப் போட்டிகளில் பங்கு பெறச் செய்வது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
இக் கலந்துரையாடல் கூட்டத்தில் திருப்பத்தூர் மாவட்ட கழக தோழர்கள் அனைவரும் பங்கேற்றனர். பெ.கலைவாணன் மாவட்டச் செயலாளர் நன்றி தெரிவித்தார்.
திருப்பத்தூர் மாவட்ட கலந்துரையாடல் மூட நம்பிக்கை ஒழிப்பு பொதுக்கூட்டம் பெரியார் பேச்சுப் போட்டி நடத்த முடிவு
Leave a comment