பாலியல் குற்றவாளிகளுக்கு அரசு வேலை கிடையாது ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் திட்டவட்டம்

1 Min Read

ஜெய்ப்பூர், ஆக. 10 –  ‘பாலியல் குற்றங்களில் ஈடுபட்டவர்கள், குற்றப் பின்னணி உள்ளவர்களுக்கு அரசு வேலை வழங்கப்படாது’ என, ராஜஸ்தான் அரசு அறிவித்து உள்ளது. ராஜஸ்தானில், முதல மைச்சர் அசோக் கெலாட் தலைமையில், காங்கிரஸ் ஆட்சி நடக் கிறது. 

இந்த மாநிலத்தில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதி கரித்து வருவதாக பா.ஜ., குற்றஞ்சாட்டி வருகிறது. சமீபத்தில் கூட, பில்வாரா மாவட்டத்தில், 4 வயது சிறுமி கூட்டு பாலியல் வன் கொடுமை செய்யப்பட்டு, செங்கல் சூளையில் வைத்து எரித்துக் கொல் லப்பட்டார். 

இந்த வழக்கில், ஏழு பேரை காவல் துறையினர் கைது செய் தனர். வழக்கு விசாரணை விரை வாக நடத்தப்பட்டு குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என, மாநில அரசு உறுதி அளித்துள்ளது. இந்நிலையில், பாலியல் துன்புறுத்தல், அத்து மீறல், வன்கொடுமை உள்ளிட்ட பாலியல் குற்றங்களில் ஈடுபடு வோர் மற்றும் குற்றப் பின்னணி உள்ளோருக்கு அரசுப் பணிகள் வழங்கக் கூடாது என, மாநில அரசு முடிவு செய்துள்ளதாக முதலமைச்சர் அசோக் கெலாட் 8.8.2023 அன்று அறிவித்தார். 

இதற்கான ஆவணங்கள் காவல் நிலையங்களில் பராமரிக்கப்பட்டு மாநில அரசுக்கு உரிய நேரத்தில் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *