சென்னை, ஆக. 17- மலர்க்கேணி ஆய்வுகள் சார்பில் வழங்கப்படும் சிறந்த நூலகருக்கான எஸ்.ஆர்.ரங்கநாதன் விருது இந்த ஆண்டு சென்னை பெரியார் திடலில் இயங்கி வரும் பெரியார் பகுத்தறிவு ஆய்வு நூலகத்தின் நூலகர் கி.கோவிந்தனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான அறிவிப் பினை வெளியிட்ட மணல் கேணி ஆய்வுக ளின் ஆசிரியரும், விழுப்பு ரம் நாடாளுமன்ற உறுப் பினருமான து.ரவிக்குமார்
செப்டம்பர் 5ஆம் தேதி விழா நடைபெறும் என் றும் நிகழ்வுகள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
தருமபுரி மாவட்டம் வெள்ளாளப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கி. கோவிந்தன் முதுநிலை அறிவியல் பட்டம் பெற் றவர். நூலக அறிவியல் துறையில் எம்.பில். பட்டம் பெற்று சென்னை பல்கலைக்கழகத்தில் இரண்டு ஆண்டுகள் பணியாற்றியவர். 2003ஆம் ஆண்டு முதல் பெரியார் பகுத்தறிவு ஆய்வு நூலகத்தில் நூல கராகப் பணியாற்றி வருகிறார். 126 பி.எச்.டி. மாணவர்களுக்கும், 263 எம்.பில். மாணவர் களுக்கும் ஆய்வின் போது உதவியிருக்கிறார். இவர் தொடராக எழு திய “இந்தியாவில் நூல கங்களின் வரலாறும் வளர்ச்சியும்” என்னும் கட்டுரைத் தொடர் நூலகங்கள் பற்றிய சிறந்த ஆய்வு நூலாக வெளி வந்துள்ளது. இவ்விருது 2009ஆம் ஆண்டு முதல் வழங்கப் பட்டு வருகிறது. இதுவரை நூலகர்கள் நாகேந்திரன், உத்திராடம், ராஜேஷ் தீனா, முனைவர் காமாட்சி ஆகியோர் இந்த விருதினைப் பெற்று உள்ளனர்.