சென்னை, ஆக.17 டிஎன்பிஎஸ்சி நடத்திய ஒருங் கிணைந்த பொறியியல் பணிகளுக்கான தேர்வின் முடிவுகள் நேற்று (16.8.2024) வெளியிடப்பட்டன. இதனடிப்படையில் நேர்முகத் தேர்வுக்கு 644 பேர் அனு மதிக்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப் பாட்டு அலுவலர் ஏ.ஜான் லூயிஸ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் உள்ளடக்கிய பதவிகளில் 358 காலியிடங்களை நிரப்பும் பொருட்டு கடந்த ஜனவரி 6 மற்றும் 7-ஆம் தேதி எழுத்துத்தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வின் முடிவுகள் தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளன. அடுத்த கட்டதேர்வான நேர்முகத்தேர்வுக்கு 644 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் பதிவெண்கள் அடங்கிய பட்டியலை இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.