ஆசிரியர் விடையளிக்கிறார்

3 Min Read

கேள்வி 1: விடுதலை நாளைக் கொண்டாடவா ராம் ரகீமிற்கு 28 முறையும், ஆசாராமிற்கு 3 முறையும் பிணை வழங்கியுள்ளார்கள்?

– ச.மணிமாறன், திருத்தணி

பதில் 1: இது மில்லியன் டாலர் கேள்வி! பதில்தான் கடினம்!!

– – – – –

கேள்வி 2: வினேஷ் போகாட் விவகாரத்தில் அவரே தான் தீர்வு காணமுற்படவேண்டும் என்று இந்திய ஒலிம்பிக் சம்மேளனத் தலைவியும், பா.ஜ.க. மாநிலங்களவை உறுப்பினருமான பி.டி.உஷா கூறியுள்ளாரே?

– வே.குமரன், மாமல்லை

பதில் 2: உங்கள் கேள்வியிலேயே பதில் உள்ளதே! அவர் பா.ஜ.க. மாநிலங்களவை உறுப்பினர் ஆன நிலைமையில் வேறு எப்படி இருக்கும் அவர் பதில்?

– – – – –

ஆசிரியர் விடையளிக்கிறார், ஞாயிறு மலர்

கேள்வி 3: பேரிடராக அறிவிக்க முடியாது என்று கூறிய ஒன்றிய அரசு பிரதமர் மோடி – பிறகு வயநாட்டிற்கு சுற்றுலாவிற்காகவா சென்றார்?

– தே.தாமோதரன், மதுரை

பதில் 3: எங்கும், எல்லாம் இரட்டை வேட மயமே!

– – – – –

கேள்வி 4: பெரும்பாலான விளையாட்டு சம்மேளனங்களில் அதற்கு சிறிதும் தொடர்பில்லாத நபர்களே தலைவர்களாக உள்ளனரே?

– சோ.கன்னியப்பன், சாலவாக்கம்

பதில் 4: அரசியல் தகுதி இருக்கோன்னோ! அது போதாதா?

– – – – –

கேள்வி 5: ‘வேர்களைத் தேடி திட்டம்’ எந்த அளவிற்குத் தமிழ் வளர்ச்சிக்குப் பயன்படும்?

– க.சாக்கியமுனி, காஞ்சி

பதில் 5: இளம் பிள்ளைகளுக்கு நல்ல பண்பாட்டு – ஒருமைப்பாட்டுக்கு விதை விதைத்து எதிர்கால பயிர்கள் செழிப்பிற்கு நிச்சயம் வழி வகுக்கும் என்பது நான் நேரில் (15.8.2024) அந்த 15 நாடுகளைச் சேர்ந்த மாணவச் செல்வர்களின் ஆர்வத்தைப் பார்த்தபோது புரிந்தது.
தமிழ்நாடு அரசின் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறைக்கு நமது பாராட்டுகள்!

– – – – –

ஆசிரியர் விடையளிக்கிறார், ஞாயிறு மலர்

கேள்வி 6: 2020ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் பிரதமர் மோடி காஷ்மீர் தேர்தலை நடத்துவோம் என்று செங்கோட்டையில் முழங்குகிறார்? இந்த ஆண்டாவது அங்கு மக்கள் அதிகாரம் மீளுமா?

– வே.மெய்ப்பொருள், ஈரோடு

பதில் 6: பொறுத்திருந்து பார்ப்போம்! சில மாதங்கள் தானே!

– – – – –

கேள்வி 7: எந்த முகாந்திரமுமே இல்லாமல் முதலமைச்சர், அமைச்சர்களை சிறையில் வைத்துள்ளார்கள் என்று உச்சநீதிமன்றமே ஒன்றிய அரசின் ஏவல் துறைகளைக் கண்டித்துள்ளதே?

– கி.மாசிலாமணி, மதுராந்தகம்

பதில் 7: கண்டனம் பயன் தந்தால் நல்லது!

– – – – –

ஆசிரியர் விடையளிக்கிறார், ஞாயிறு மலர்

கேள்வி 8: செபி தலைவி ஊழல் விவகாரத்தில் அமைதியாக இருந்தால் எதிர்ப்புக் குரல்கள் எழுப்புவோர் அடங்கிவிடுவார்கள் என்று பதில் கூறவேண்டியவர்கள் நினைக்கிறார்களோ?

– மா.ஏகலைவன், சிவகங்கை

பதில் 8: மவுனச் சதியால் இதை மறைத்துவிடும் மமதைக்கு மரண அடி கிடைக்கும் – உரிய நேரத்தில் – உரியவர்களால்! மக்கள் மன்றம் விழித்திருக்கிறது!!

– – – – –

கேள்வி 9: இவ்வளவு குழப்பமான தேர்வு முடிவுகள் இருந்தும் மருத்துவப் படிப்பிற்கான கலந்தாய்வைத் தொடங்கி உள்ளார்களே?
– வே.வேங்கைமுத்து, மதுரை

பதில் 9: மூர்க்கத்தனமும், முதலைப் பிடியும் எளிதில் பாடம் கற்பதில்லை!

– – – – –

கேள்வி 10: வக்புவாரிய மசோதாவினை நிலைக்குழுவிற்கு அனுப்பியதையும் தங்களின் சாதனை என்று பா.ஜ.க. பேசுகிறதே? நிறைவேறாமல் அனுப்பப்பட்டதில் என்ன சாதனையைக் கண்டார்கள்?

– கி.மாசிலாமணி, மதுராந்தகம்

பதில் 10: வித்தைக்காரன் இடறி வீழ்ந்தால் அவருக்கு அதுவும் “வித்தை” என்று பெயர் கிட்டுமல்லவா? அந்த ரகம் போலும் இது!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *