தமிழ்நாட்டில் குரூப் 1 பதவிக்கான முதன்மைத் தேர்வு தொடக்கம்

Viduthalai
1 Min Read

சென்னை, ஆக 11  குரூப் 1 முதன்மைத் தேர்வு நேற்று (10.8.2023) தொடங் கியது. தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர் வாணையம் (டிஎன்பி எஸ்சி) நடத்தும் போட் டித் தேர்வுகள் மூலம் நிரப்பப்பட்டு வரு கின்றன. 

இந்நிலையில் துணை ஆட்சியர், கூட்டுறவுச் சங்க துணைப் பதிவாளர் உட்பட குரூப் 1 பதவியில் காலியாக உள்ள 92 பணியிடங்களை நிரப்புவதற் கான முதல்நிலைத் தேர்வு மாநிலம் முழுவதும் கடந்த நவ. 19இ-ல் நடத் தப்பட்டது. இந்த தேர்வை 1.90 லட்சம் பட்டதாரிகள் எழுதினர். அவர்களுக்கான தேர்வு முடிவுகளை டிஎன்பி எஸ்சி ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியிட்டது. இதில் வெற்றிபெற்றவர் கள் அடுத்ததாக முதன் மைத் தேர்வு எழுத வேண்டும். 

அதன்படி குரூப் 1 முதன்மைத்தேர்வு நேரில் (ஆக. 10) தொடங்கி ஆக. 13 வரை நடைபெற உள்ளது. இதற்காக சென்னையில் மட்டும் 22 தேர்வு மய்யங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கட்டாய தமிழ் தகுதி தேர்வு, பொது அறிவு, விரிவாக எழுதுதல் உட் பட 4 தாள்களாக தேர்வு நடத்தப்பட உள்ளது. நுழைவுச் சீட்டு வெளி யீடு: இதற்கிடையே நீதித் துறையில் உரிமையியல் (சிவில்) நீதிபதி பணியி டங்களை நிரப்புவதற் கான முதல்நிலைத் தேர்வு ஆகஸ்ட் 19-ம் தேதி நடை பெற உள்ளது. இந்த தேர்வு எழுத தகுதி பெற் றவர்களுக்கான நுழைவுச் சீட்டுகளை டிஎன்பி எஸ்சி தற்போது வெளியிட்டுள்ளது. 

அவற்றை தேர்வர்கள் www.tnpsc.gov.in, www.tnpscexams.in ஆகிய இணையதளங் களில் சென்று பதிவிறக் கம் செய்து கொள்ளலாம் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வா ணையம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *