அந்தோ பரிதாபம்! சாமி கும்பிடப் போய் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி மூன்று பக்தர்கள் பலி

2 Min Read

நெல்லை, ஆக.16- தாமிரபரணி ஆற்றில் மூழ்கி அக்காள்-தங்கை உள்பட 3 பக்தர்கள் பலியானார்கள். சாமி கும்பிட வந்த இடத்தில் இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.
நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற காரையாறு சொரி முத்து அய்யனார் கோவில் உள்ளது.

இந்த கோவிலுக்கு வந்து அங்குள்ள தாமிரபரணி ஆற்றில் பக்தர்கள் ‘புனித’ நீராடி, நேர்த்திக்கடன் செலுத்தி சாமி தரிசனம் செய்கிறார்களாம். மேலும், ஆடி மாதத்தில் நடைபெறும் திரு விழாவுக்காக பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்து குடில்கள் அமைத்து தங்கி வழிபடுவார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவிலில் ஆடி திருவிழா நடை பெற்றது.

சிவகாசி பக்தர்கள்

இந்த திருவிழாவில் விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த முருகன் என்பவர் தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் இந்த ஆண்டு நடைபெற்ற விழாவில் பங்கேற்க முடியவில்லை என்பதால் நேற்று (15.8.2024) முருகன் தனது குடும்பத்தினர், உறவினர்கள் என 23 பேருடன் ஒரு வேனில் சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு வந்தார். அங்கு பக்தர்கள் அனைவரும் காலையில் வழிபாடு செய்தனர்.

தண்ணீரில் மூழ்கிய
அக்காள் – -தங்கை

மதியம் கோவில் வளாகத்தில் உள்ள பட்டவராயன் கோவில் அருகே தாமிரபரணி ஆற்றில் முருகனின் மகள்களான கல்லூரி மாணவி மேனகா (வயது 18), பள்ளி மாணவி சோலை ஈஸ்வரி (15) உள்ளிட்டவர்கள் குளித்து முடித்து விட்டு சாப்பிடுவதற்காக 2 பேரும் எழுந்து சென்றனர். அப்போது, அவர்கள் திடீரென்று ஆற்றில் இருந்த ஆழமான தடாகத்தில் எதிர்பாராதவிதமாக விழுந்தனர். அவர்களுக்கு நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கினார்கள். இதை பார்த்து அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரது சித்தப்பா சங்கரேஸ்வரன் (40), உறவினரான மாரீஸ்வரன் (28) ஆகியோர் ஆற்றில் இறங்கி 2 பேரையும் மீட்க முயன்றனர். ஆனால், அவர்களும் தண்ணீரில் மூழ்கினார்கள். எனினும் மாரீஸ் வரனை அந்த பகுதியில் இருந்த சிலர் பத்திரமாக மீட்டனர்.

3 பேரும் பரிதாப சாவு

உடனடியாக அம்பை தீய ணைப்பு நிலையத்திற்கும், மணி முத்தாறு காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் நிகழ்வு இடத்திற்கு விரைந்தனர். அவர்கள் நீண்ட நேர தேடுதலுக்குப் பிறகு மேனகா, சோலை ஈஸ்வரி, சங்க ரேஸ்வரனை ஆகிய மூவரையும் பிணமாக மீட்டனர்.
3 பேரும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தது தெரிய வந்தது. அவர்களின் உடல்களை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *