புதுச்சேரிக்கு மாநில தகுதி கோரி அனைத்து கட்சியினருடன் விரைவில் டில்லி பயணம்

1 Min Read

முதலமைச்சர் ரங்கசாமி தகவல்

புதுச்சேரி, ஆக.16 புதுச்சேரிக்கு மாநில தகுதி கோரி விரைவில் அனைத்து கட்சியினருடன் டில்லி செல்வதை எதிர்பார்க்கலாம் என்று முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்தார்.

சுதந்திர தினத்தையொட்டி நேற்று மாலை புதுச்சேரி ஆளுநர் மாளிகையில், துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் மக்கள் பிரதிநிதிகளுக்கு தேநீர் விருந்தளித்தார். இதில் முதலமைச்சர் ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய் ஜெ. சரவணன்குமார், சட்டப் பேரவை துணைத் தலைவர் ராஜவேலு, எம்எல்ஏக்கள், எதிர்க்கட்சித் தலைவர் சிவா மற்றும் திமுக எம்எல்ஏக்கள், பாஜக மாநிலத் தலைவர் செல்வகணபதி எம்பி, காங்கிரஸ் மாநிலத் தலைவர் வைத்திலிங்கம் எம்பி, முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, “சட்டப்பேரவையில் நம்முடைய மாநிலத் துக்கு மாநில தகுதி வேண்டும் என்பதை பலமுறை வலியுறுத்தியுள்ளோம். இப்போது அனைத்து கட்சிகளும் சேர்ந்து ஒன்றி ணைந்து புதுச்சேரிக்கு மாநில தகுதி வேண்டும் என்று வலியுறுத்துவோம். புதுச்சேரியின் வளர்ச்சிக்கு எந்தெந்த திட்டங்களையெல்லாம் கொண்டு வர வேண்டுமோ, அதையெல்லாம் கொண்டுவர வேண்டும்.

அதற்கு ஆளுநர் ஒத்துழைப்பு கொடுப்பார்.மாநில தகுதி கோரி விரைவில் அனைத்து கட்சியினருடன் டில்லி செய்வதை எதிர்பார்க்கலாம். அடுத்து வரும் சட்டப்பேரவை தேர்தலுக்குள் புதுச்சேரிக்கு மாநில தகுதி வாங்கி விடுவோம் என்று நம்பிக்கை இருக்கிறது. வாழ்க்கையே நம்பிக்கை தான். டில்லிக்கு போகும்போது சொல்கிறேன்”
இவ்வாறு ரங்கசாமி தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *