தஞ்சாவூர் மாவட்டம், உரத்தநாடு வட்டம், கண்ணந்தங்குடி கீழையூர் திராவிடர் கழக கிளை செயலாளர் ப.தாமரைகண்ணனுக்கு-100க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் விதை ரகங்களை பெருக்கம் செய்து விதை வங்கி பராமரித்து வருகின்ற அரும்பணியை பாராட்டி மாநில வேளாண் வளர்ச்சி திட்டம் 2023-2024இன் கீழ் நெல் விதை வங்கி பாதுகாவலர் விருது – 2023-2024″ மற்றும் விதை வங்கி பராமரிப்பு தளவாடங்களுக்கென ரூ.3 இலட்சம் ரொக்கப்பரிசு ஆகியவை தமிழ்நாடு அரசு வேளாண்மைத்துறை மூலம் வழங்கி பாராட்டப்பட்டது. 15-08-2024 அன்று தஞ்சாவூரில் நடைபெற்ற சுதந்திர நாள் விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் சார்பில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் ப.தாமரைகண்ணன் விருது வழங்கி பாராட்டு தெரிவித்தார்.