வைகோ தாக்கல் செய்த நியூட்ரினோ ஆய்வு மய்ய வழக்கு பதில் மனுத் தாக்கல் செய்ய ஒன்றிய அரசுக்கு கால அவகாசம் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவு

viduthalai
1 Min Read

மதுரை, ஆக. 15– நியூட்ரினோ ஆய்வு மய்ய விவகாரம் தொடர்பாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தாக்கல் செய்த மனுவிற்கு பதில் மனுத் தாக்கல் செய்ய ஒன்றிய அரசிற்கு கால அவகாசம் வழங்கி உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தர விட்டுள்ளது.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நியூட்ரினோ திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என கடந்த 2015ஆம் ஆண்டில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அதில், “நியூட்ரினோ திட்டத் துக்காக தேனி மாவட்டம் பொட்டி புரம் பகுதியில் ஆயிரம் மீட்டர் ஆழத்துக்கு சுரங்கம் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
இந்த திட்டத்தால் தேனி பகுதியில் நில வளம் அழியும். மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள பசுமைத் தொடர்களுக்கு பேரழிவு ஏற்படும். விவசாயம், தண்ணீர், வன விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படும்.

மனித உயிர்களுக்கு ஆபத்து நேரிடும். ஆய்வு மய்யம் அமைய உள்ள பகுதியில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் முல்லைப் பெரியாறு அணையும், 60 கிலோ மீட்டர் தொலைவில் கேரள மாநிலத்தில் இடுக்கி அணையும் அமைந்துள்ளன.

மக்களை பாதிக்கச் செய்யும் திட்டங்களை செயல்படுத்த ஒன்றிய அரசு எப்போதும் தமிழ்நாட்டைத் தேர்வு செய்கிறது. எனவே, நியூட்ரினோ ஆய்வு மய்யம் அமைக்கும் திட் டத்தை செயல்படுத்த தடை விதிக்க வேண்டும்” என மனுவில் கூறி யிருந்தார்.
இந்த நிலையில், இந்த வழக்கு நேற்று (14.8.2024) நீதிபதிகள் சுப்பிர மணியன், விக்டோரியா கவுரி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது ஒன்றிய அரசுத் தரப்பில் பதில் மனுத் தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்டது. கால அவகாசம் வழங்கி வழக்கை ஆகஸ்ட் 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *