கோவை, ஆக.15- கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி அவர்கள் சிறந்த ஆட்சியர் விருது பெறுகிறார்.
மாற்றுத் திறனாளிகளுக்கு மிக சிறப்பான திட்டங்களை ஏற்படுத்தி கொடுத்ததற்காக சிறந்த ஆட்சியர் விருதினை வருகின்ற 15ஆம் தேதி கொண்டாடப்படும் சுதந்திர நாள் விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் பெறுகிறார்.
கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களை சந்தித்து கழக வெளியீடு புத்தகங்கள் வழங்கி பெரியார் புத்தக நிலையம் & ஜீடி நாயுடு நினைவு பெரியார் படிப்பகம் பொறுப்பாளர் அ.மு.ராஜா வாழ்த்து கூறினார்.