நெடுஞ்சாலைத்துறையில் 180 பேருக்கு பணி நியமன ஆணை: முதலமைச்சர் வழங்கினார்

viduthalai
2 Min Read

சென்னை, ஆக.15- நெடுஞ் சாலைத் துறையின் உதவியாளர் பணியிடத்துக்கு டி.என்.பி.எஸ்.சி. மூலம் தேர்வு செய்யப்பட்ட 180 பேருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

நெடுஞ்சாலை துறை

மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு சாலை உட்கட்டமைப்பு வசதிகள் முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த வகையில், தமிழ்நாடு அரசின் நெடுஞ்சாலை துறை சார்பில் மாநிலம் முழுவதும் உள்ள சாலைகள் மற்றும் பாலங்கள் பராமரித்தல், மேம்பாடு செய்தல், புதிய பாலங்கள் கட்டுதல் ஆகிய பணிகள் நடைபெற்று வருகின்றன. நெடுஞ்சாலைத் துறையின் பணிகள் தொய்வின்றி நடைபெற காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன.

கடந்த 2021ஆம் ஆண்டு முதல் தற்போது வரை, நெடுஞ்சாலை துறை சார்பில் 414 இளநிலை வரை தொழில் அலுவலர்கள், 33 உதவி பொறியாளர்கள், 66 இளநிலை உதவியாளர்கள், 48 தட்டச்சர்கள், 6 சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை-3, தணிக்கை உதவியாளர்கள் 4 பேர் என பல்வேறு பணியாளர் கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர் வாணையத்தின் (டி. என்.பி.எஸ்.சி.) வாயிலாக நேரடி நியமனத்தின் மூலம் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், 45 இள நிலை உதவி யாளர்கள், 3 உதவி வரைவாளர்கள், 9 தட்டச்சர் கள், 7 பதிவுரு எழுத்தர்கள், 24 அலுவலக உதவி யாளர்கள் ஆகியோர் கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

பணி நியமன ஆணை

இந்த நிலையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) வாயிலாக, நெடுஞ் சாலைத் துறையின் உதவியாளர் பணியிடத்துக்கு 180 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இவர் களுக்கான பணி நியமன ஆணை வழங்கிடும் அடையாளமாக, தலைமை செயலகத்தில் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் 10 பேருக்கு பணி நியமன ஆணைகளை நேற்று (14.8.2024) வழங்கினார்.

இதைத் தொடர்ந்து, 2022-2023 மற்றும் 2023-2024ஆம் நிதியாண்டு களில், தமிழ்நாடு கடல்சார் வாரியம் ஈட்டிய நிகர லாபத்தில், தமிழ்நாடு அரசின் பங்கு ஈவுத் தொகை ரூ.8 கோடியே 78 லட்சத்துக்கான காசோலைகளை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், பொதுப் பணிகள். நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று (14.8.2024) வழங்கினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *