புதுச்சேரி, ஆக. 14- புதுச்சேரி மொழி யியல் ஆராய்ச்சி நிறுவனம் மூடுவிழா நோக்கி சென்று கொண்டிருப்பதை இப்பேரவையின் கவனத்திற்கு கொண்டு வருவது சம்பந்தமாக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா பேசிய தாவது: –
புதுச்ேசரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் 1986–ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. கலை, பண்பாட்டுத் துறையின் கீழ் செயல்படும் இந்நிறுவனம், மாநிலத்தில் உள்ள கவிஞர்கள், மானிடவியல், இலக்கியம், பண்பாட்டு தளங்களை ஆய்வு செய்து, ஆவணப்படுத்துவதை முக்கிய இலக்காகக் கொண்டு செயலாற்றி வருகிறது. அத்துடன் எம்.பில்., பி.எச்.டி., படிப்புகளையும் நடத்தி, ஆய்வாளர்களுக்கு பட்டங்களை வழங்கி வருவதோடு, பிற மாநிலத்திலும் மற்றும் நாட்டினருக்கு தமிழ் கற்பிக்கப்படுகிறது.
இலக்கியம், மொழியியல், பண்பாட்டு இயல் என மூன்று துறைகளை கொண்டுள்ள இந்நிறுவனத்தில் 12 பேராசிரியர்கள் பணியாற்றி வந்தனர். ஆனால் இன்றைக்கு நிறுவனத்தில் ஒரு பேராசிரியர் கூட பணியில் இல்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாக மொழியியல் பண்பாட்டுநிறுவனத்திற்கு பி.எச்.டி., படிப்பில் ஒரு மாணவர் கூட சேர்க்கப்படவில்லை.
கலை, பண்பாட்டுத் துறை இயக்குநர் பொறுப்பு அடிப்படையில் இந்நிறுவனத்தை கவனித்து வருகிறார். பத்து பேர் இருக்க வேண்டிய அலுவலகத் தில் ஒரு யுடிசி, ஒரு உதவியாளர், ஒரு டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், ஒரு நூலகர் என நான்கு பேர் மட்டும் பணி யாற்றி வருகிறார்கள். மற்றவர்கள் வேறு துறைகளுக்கு மாறிவிட்டனர்.
கடந்த ஆண்டு 9 பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்என் இப்பேரவையில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இன்னும் நிரப்பப் படவில்லை. புதுச்சேரி அரசு மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பி மீண்டும் அந்நிறுவனத்திற்கு புத்துயிர் அளிக்க வேண்டும் என்று இந்த அவையின் வாயிலாக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என அவர் பேசினார்.