ஒன்றிய அரசில் 2006 சுருக்கெழுத்தர் பணி: எஸ்எஸ்சி அறிவிப்பு

2 Min Read

ஒன்றிய அரசு துறை களில் நிரப்பப்பட உள்ள 2006 சுருக்கெழுத்தாளர் கிரேடு ‘சி’ மற்றும் ‘டி’ பணியிடங்களுக்கான சுருக் கெழுத்து தேர்வுக்கான அறிவிப்பை ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வா ணையம் (எஸ்எஸ்சி) வெளி யிட்டுள்ளது.

இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ள இளை ஞர்களிடம் இருந்து வரும் 17 ஆம் தேதிக்குள் இணைய வழி மூலம் விண்ணப்பங்கள் வரவேற் கப்படுகின்றன.

தேர்வு பெயர்: Stenographer Grade ‘C’ and ‘D’ Exam – 2024
பணி: Stenographer
காலியிடங்கள்: 2006
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி யுடன் ஹிந்தி அல்லது ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 80 முதல் 100 வார்த்தைகள் சுருக்கெழுத்தில் எழுதும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 1.8.2024 தேதியின்படி சுருக் கெழுத்தர் கிரேடு ‘சி’ பணியிடங்களுக்கு 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும். கிரேடு ‘டி’ பணியிடங்களுக்கு 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.
எஸ்சி, எஸ்டி பிரிவி னருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டு களும் வயது வரம்பில் சலுகைகள் வழங்கப்படும்.
உடற்தகுதி: விண் ணப்பத்தாரர்கள் குறைந்த பட்சம் 157 செ.மீ உயரமும், 50 கிலோ எடையும் இருக்க வேண்டும். மார்பளவு குறைந்தது 75 செ.மீ இருக்க வேண்டும். 5 செ.மீ சுருங்கி விரியும் தன்மையுடன் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எஸ்எஸ்சி-ஆல் இணைய வழி மூலம் நடத்தப்படும் சுருக் கெழுத்தர் தேர்வில் பெறும் மதிப்பெண் மற்றும் சுருக்கெழுத்து எழுதும் திறன் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
தேர்வு நடைபெறும் மாதம்: அக்டோபர் – நவம்பர் 2024
தேர்வு நடைபெறும் இடம்: தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி, சேலம், கோவை, மதுரை, திருநெல்வேலி மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்க ளில் நடைபெறும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை இணைய வழி மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி ,மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணு வத்தினர் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: www.ssc.nic.in என்ற இணையதளத்தின் மூலம் இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 17.8.2024

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *