குடந்தை பொதுக்குழு தீர்மானங்கள் செயல்படுத்தப்படும் சேலம் மாவட்ட கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம்

viduthalai
1 Min Read

சேலம், ஆக. 14– 11.8.2024 அன்று காலை 11.30 மணிக்கு அம்மாப்பேட்டை குயில் பண்ணையில் தலைமைக் கழக அமைப்பாளர் கா.நா.பாலு தலைமையில், மாவட்ட தலைவர் அ.ச.இளவழகன் முன்னிலையில் சேலம் மாவட்ட கழகக் கலந் துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

மாவட்டச் செயலாளர் சி.பூபதி, பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் வீரமணி ராஜ், மாநகர் தலைவர் அரங்க இளவரசன், செயலாளர் இராவண பூபதி, அம்மாப்பேட்டை பகுதி செயலாளர் சு.இமயவரம்பன், பொதுக்குழு உறுப்பினர் பேங்க் இராசு உள்ளிட்ட கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர்.

கடந்த 4.8.2024 அன்று கும்பகோணம் நகரில் நடைபெற்ற பொதுக்குழு தீர்மானங்களை செயலாக்குவது என்று தீர்மானிக்கப்படுகிறது.

தலைமைக் கழக அறிவிப்பின் படி 22.8.2024 அன்று தோழர் நர்மதா சிறப்புரையாற்றும் கூட்டத்தினை சேலம் கன்னங்குறிச்சியில் சிறப்பாக நடத்து வது என்று தீர்மானிக்கப்படு கிறது.

17.9.2024 தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாளில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து, மாவட்டம் முழுவதும் கழகக் கொடியேற்றி, தோழர்களின் இல்லங் கள், மற்றும் பொது இடங்களில் தந்தை பெரியாரின் உருவப் படம் வைத்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி, கொள்கை விழாவாக கொண்டாடுவது என்று தீர்மானிக்கப்படுகிறது. பொதுக்குழு உறுபபினர் பேங்க் இராஜ் நன்றி கூற கலந்துரையாடல் கூட்டம் முடிவுற்றது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *