தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் 1,190 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

1 Min Read

சென்னை, ஆக.14- தமிழ்நாட்டில் பொதுமக்களின் வசதிக்காக அரசு சார்பில் வார விடுமுறை நாள்கள் மற்றும் முக்கிய விழா நாட்களின் போது கூடுதலாக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் சுதந்திர நாள் பொது விடுமுறை உள்ளிட்ட தொடர் விடுமுறையை முன்னிட்டு 1,190 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழ்நாடு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து ஆகஸ்ட் 14ஆம் தேதி 470 பேருந்துகளும், ஆகஸ்ட் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் 365 சிறப்புப் பேருந்துகளும், மதுரை, கோவை, நெல்லை மற்றும் திருச்சி உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனைப் போலவே தமிழ்நாட்டில் முக்கிய நகரங்களில் இருந்தும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *