கிரிக்கெட்டில் இலங்கை தோல்வி அடைந்தால் தமிழ்நாடு மீனவர்களை உயிர்பலி வாங்குவதா? சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு

viduthalai
2 Min Read

மதுரை, ஆக.14- கிரிக்கெட்டில் இந்தியாவிடம் இலங்கை அணி தோற்றால் தமிழ்நாடு மீனவர்களை இலங்கை கடற்படை உயிர்பலி வாங்கு கிறது என்பது குறித்த குற்றச்சாட்டு பற்றி ஒன்றிய, மாநில அரசுகள் பதில் அளிக்க மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இலங்கை கடற்படையினர் தாக்குதல்

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவரும், தமிழர் கட்சியின் மாநில செயலாளருமான தீரன் திருமுருகன், மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்துக் கொடுத்த பின்பு, 500-க்கும் மேற்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் நடுக் கடலில் கொல்லப்பட்டுள்ளனர்.

கடந்த மாதம் 31ஆம் தேதி ராமேசுவரம் துறைமுகத்தில் இருந்து கார்த்திகேயன் என் பவருக்கு சொந்தமான படகில் மூக்கையா, முத்து முனியாண்டி, மலைச்சாமி, ராமச்சந்திரன் ஆகிய 4 மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.

கிரிக்கெட்டில் தோல்வி

அந்த சமயத்தில் நடந்த பன் னாட்டு கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியிடம் இலங்கை அணி தோல்வி அடைந்ததால் ஆத்திரத்தில் இருந்த இலங்கை கடற்படையினர், கடலில் மீன்பிடித்துக் கொண்டு இருந்த தமிழ்நாடு மீனவர்களின் படகை தாக்கியுள்ளனர். இதில் மீனவர் மலைச்சாமி படுகாயம் அடைந்து இறந்தார்.

மற்றொருவர் கடலில் காணா மல் போனார். அவரது நிலை என்ன என்பது இப்போது வரை தெரியாமல் உள்ளது. மற்ற 2 பேரும் இந்திய கடற்படையினரிடம் ஒப்படைக் கப்பட்டனர்.

2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் போதும் இலங்கை அணி, இந்திய அணியிடம் தோல்வி அடைந்தது. அப்போதும் இலங்கை கடற்படையினர் ராமேசு வரம் மீனவர்களின் படகை பறி முதல் செய்து, 4 மீனவர்களை சித்ரவதை செய்து கொலை செய்தனர்.

கொடூர தாக்குதலில் ஈடுபடும் இலங்கை கடற்படையினர் மீது ஒன்றிய, மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழ்நாடு மீனவர்களுக்கு உரிய பாது காப்பை வழங்குவதும் அரசமைப்புச் சட்டத்தால் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

ரூ.1 கோடி இழப்பீடு

அதன்படி தமிழ்நாடு மீனவர் பலியானதற்கு காரணமாக இலங்கை கடற்படையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்த ரவிட வேண்டும். இலங்கை கடற் படையினரால் படுகொலை செய்யப் பட்ட மீனவர்களின் குடும்பத்திற்கு ரூ.1 கோடியை இழப்பீடாக வழங்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பிர மணியன், விக்டோரியா கவுரி ஆகியோர் முன்பு நேற்று (13.8.2024) விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் வழக் குரைஞர் விவேகானந்தன் ஆஜராகி, பன்னாட்டு கடல் விதிகளின்படி தமிழ்நாடு மீனவர்கள் கடலில் மீன் பிடிக்க உரிமை உள்ளது. அவ்வாறு இருக்கும் போது அவர்களை இலங்கை கடற்படையினர் தாக்குவது சட்ட விரோதம் என வாதாடினார்.

பதில் அளிக்க உத்தரவு

விசாரணை முடிவில், இலங்கை கடற்படை மீதான மேற்கண்ட குற்றச் சாட்டுகள் குறித்து ஒன்றிய, மாநில அரசுகள் பதில் அளிக்க தாக்கீது அனுப்பும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை 4 வாரத்துக்கு ஒத்தி வைத்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *