எரிபொருள்
கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு புதிய எரிபொருளை விநியோகம் செய்வது தொடர்பாக இந்தியா – ரஷ்யா இடையே ரூ.10,000 கோடிக்கு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
தமிழ் மொழித் தாள்…
அரசு உதவி குற்றவியல் வழக்குரைஞர் (கிரேடு-2) தேர்வு முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. புதிய முறையில் முதல்நிலைத் தேர்வில் கூடுதலாக பொது அறிவுத்தாள் தேர்வும், மெயின் தேர்வில் கூடுதலாக கட்டாய தமிழ்மொழி தாள் தேர்வும் இடம் பெறுகின்றன.
மென்பொருள்
தமிழ்நாட்டில் உள்ள 25,000 தாழ்வழுத்த தொழில் நிறுவனங்களில் ஸ்மார்ட் மீட்டரை பொருத்தும் திட்டத்தை செயல்படுத்த, மென்பொருள் உருவாக்கும் பணியில் மின் வாரியம் ஈடுபட்டுள்ளது.
உத்தரவு
அரசுப் பள்ளிகளில் பணியாளர் நிர்ணயத்தின்போது சரண் செய்யப்பட்ட பணியிடங்களை மீண்டும் பதிவு செய்யக் கூடாது என்று தொடக்கக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
பேருந்து கட்டணம்
‘பேருந்து கட்டணத்தை உயர்த்துவது குறித்து எந்த ஒரு கருத்துருவும் தமிழ்நாடு அரசிடம் இல்லை. மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் எந்த திட்டத்தையும் தமிழ்நாடு அரசு செயல்படுத்தாது’ என போக்குவரத்துத் துறை தகவல்.
நீர்வரத்து
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 45,500 கன அடியாக அதிகரித்துள்ள நிலையில், காவிரி ஆற்றில் 30,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
ஏவப்படும்
புவி கண்காணிப்புக்காக இஸ்ரோ அதிநவீன இஓஎஸ்-08 செயற்கைக் கோளை உருவாக்கியுள்ளது. இது எஸ்எஸ்எல்வி டி-3 ராக்கெட்டு மூலம் ஆகஸ்ட் 16-ஆம் தேதி விண்ணில் ஏவப்படுகிறது.