ஆசிரியர் பெற்ற “தகைசால் தமிழர்” விருது தந்தை பெரியார் பெற்ற விருதே!

1 Min Read

ஆசிரியர், பிற இதழிலிருந்து...

ஆசிரியர், பிற இதழிலிருந்து...

தமிழர் தலைவர்நம் தாய்மண்ணைக் காக்க

உமிபோல் பகைமைகள் ஊதி – நமின்தமிழ்

நாடு பகுத்தறிவு நாளும் வளர்ச்சிபெறப்

பாடுபடும் வீரமணி பாடு

“தகைசால் தமிழர் விருது”கலைஞர்

பகைவெல் மகன்முதல்வர் பண்பாய்  – மிகைஅறிந்தே

உன்னத உச்சம் உயர்வாக தலைவர்க்கே

நன்பரிசு தான்வழங்கும் நாடு !

பற்றிலா ஞானியார்? பாசத்தை மக்கள்மேல்

முற்றும் பதியவைத்தே முன்னேற்றம் – சுற்றிவரத்

தன்னலமில் வாழ்வர் தகுஞானி! அவ்ஞானி

நன்றுநம் ஆசிரியர் நம்பு!

பத்து வயதினிலே பற்றிய கொள்கைத்தீ

கத்துகடல் சூழ்ந்த கயமைகளை – யுத்தவெறி

சாதி மத வேறுபாட்டைச் சாடிதொண் ணூற்றின்

நீதிசமம் காண்முயற்சி நீடு!

தீண்டாமைப் பேய்கள் திமிர்பேதங் களோட

மாண்புறு தந்தைநம் மாப்பெரியார்  – காண்குறிக்கோள்

வெற்றிபெற ஓயாவிய னுழைப்பார் வீரமணி

கற்றஅறம் தொண்டறம் காப்பு!

ஈடிணை இல்லாதே இவ்வுலகம் நம்தமிழர்

கோடிகோடி மேலுயர்த்தும் கொள்கைகள் – பாடிவென்று

ஒத்துவாழ்ந் தேதமிழர் ஓங்குநிலை பெற்றுயர்த்தும்

வித்தகர் வீரமணி வேந்து!

தன்னேரில் லார்க்கே தகைசால் தமிழரெனும்

மன்பதைப் போராளி மாவிருதை – நன்றளித்த

மாமுதன்மை மாமுதல்வர் மாவரசு தான்வழங்கும்

கோமுதன்மை தந்த கொடை!

ஆசிரியர் வீரமணி ஆக்கம் செயலாக்கம்

மாசில் பெரியார் மறுபதிப்பே! – வீசுதென்றல்

காற்றாய்க்; கனலாய்ப் புனலாய் ஆயுளோங்கி

ஏற்றஆயுள் ஓங்க இனிது!

தமிழர் தலைவர் தானடைந்த இப்பரிசோ

நம்பெரியார் பெற்றபுகழ் நற்பரிசே இத்தகைமைப்

பேறு தமிழ்விருதோ பேசும் தலைமுறைகள்

வீறு திராவிடர் கழகம் மேற்று!

வாழ்க திராவிட மாதிரி நம்அரசே

வாழ்க முதல்வர் மு.க.இஸ்டாலின் – வாழ்கவே

வாழிஅறம் வாழிநலம் வாழிஅன்பு வாழியரோ

வாழிதந்தை பெரியார் வாழ்த்து!

பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன்

நன்றி: ‘முரசொலி’ 11.8.2023

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *