வரவேற்கத்தக்க நியமனம் – பாராட்டு!

1 Min Read

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வுக் கழகத் தலைவராக எஸ்.கே.பிரபாகர் அய்.ஏ.எஸ்.

தமிழ்நாடு அரசு பணி யாளர்கள் தேர்வாணையத் தலைவராக மூத்தஅய்.ஏ.எஸ். அதிகாரியான
திரு.எஸ்.கே.பிரபாகர் அவர்கள் தமிழ்நாடு அரசால் நியமனம் பெற்றிருப்பது மிகவும் பாராட்டி வரவேற்கத்தக்க நியமனம் ஆகும்!
நேர்மையும், திறமையும் வாய்ந்தவரான இவர், பல்வேறு பொறுப்புகளிலிருந்து அனுபவம் பெற்ற வர். பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர். பொறி யாளராகி, பிறகு அய்.ஏ.எஸ். படித்து, அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் மேலாண்மைத் துறை படிப்பும் பெற்ற சாதனையாளர். 2019 இல் கூடுதல் தலைமைச் செயலாளர் தகுதி பெற்றவர்.
சமூகநீதி கண்ணோட்டத்தோடு தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தலைவர் பொறுப்பிலும் அவர் முத்திரை பதிப்பார் – அவருக்கு நமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
தக்காரை அடையாளம் கண்டு நியமனம் செய்த முதலமைச்சருக்கும் நமது பாராட்டு கலந்த நன்றி!

கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்

சென்னை
14.8.2024

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *