மத்தியப் பல்கலைக் கழகங்களில் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோருக்கு இழைக்கப்படும்சமூக அநீதியைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

1 Min Read

அரசியல், நடக்க இருப்பவை


சமூக அநீதியைச் சாய்த்திட வாரீர்!

ஒன்றிய அரசின் பணிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வகை செய்த மண்டல் பரிந்துரை நடைமுறைப்படுத்தப்பட்டு 30 ஆண்டுகள் ஆகிறது.

அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டதிலிருந்தே     ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு 22.5 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு இருக்க வேண்டும்.  

ஆனால், 45 மத்தியப் பல்கலைக் கழகங்களில் 4 சதவிகிதம்தான் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினைச் சார்ந்த பேராசிரியர்கள் உள்ளனர்.

எடுத்துக்காட்டாக, நிரப்பப்பட்டுள்ள 1341 பேராசிரியர் பணியிடங்களில் 27% பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டின்படி 362 பேர் இடம் பெற்றிருக்கவேண்டும். ஆனால், 60 பேருக்கு மட்டுமே (4% மட்டுமே) பணி வழங்கப்பட்டுள்ளன. இதேபோல் 15% இடஒதுக்கீட்டின்படி 201 தாழ்த்தப்பட்டோர் பேராசிரியர்களாக நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், 96 பேர்  (7%) மட்டுமே தாழ்த்தப்பட்டோர்.

பழங்குடியினர் 7.5% இடஒதுக்கீட்டின்படி 100 பேர் இருக்கவேண்டும். ஆனால், 22 பேர்தான் (1.6% மட்டுமே) நியமிக்கப்பட்டுள்ளனர். இதேநிலைதான் பிற பணிகளிலும் உள்ளது. இந்த நிலை மாற்றப்பட வேண்டாமா?

உரிமைகளை வென்றெடுக்கத் தமிழர் தலைவர் அழைக்கிறார்.

இளைஞர்களே, மாணவர்களே போராட்ட களம் வாரீர்!

நாள்: 12.8.2023 சனிக்கிழமை மாலை 4 மணி

இடம்: வள்ளுவர் கோட்டம், சென்னை 

தலைமை: 

திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி

கண்டன உரை:

வீ. குமரேசன் (பொருளாளர், திராவிடர் கழகம்)

வழக்குரைஞர் அ. அருள்மொழி (பிரச்சாரச் செயலாளர், திராவிடர் கழகம்)

கோ. கருணாநிதி (வெளியுறவுச் செயலாளர், திராவிடர் கழகம்) 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *