பரிசோதனை – பயிற்சி இரண்டும் தேவை!

viduthalai
1 Min Read

‘‘அதிர்ந்து சிரித்தால், வேகமாக தும்மினால், ஒரு சில பெண்களுக்கு அவர்களை அறியாமல் சிறுநீர் வெளியேறும். இது பெண்கள் எதிர்கொள்ளும்‌ தலையாய பிரச்சினை. வயதானவர்கள்‌ மட்டுமல்ல இளம்‌ பெண்களும்‌ இதனால்‌ அவதிப் படுகிறார்கள்‌. இதற்கு பல காரணங்களை குறிப்பிடலாம். இந்தப் பிரச்சினைக்கு மருத்துவ துறையில் ஸ்ட்ரெஸ் யூரினரி இன்கான்டினென்ஸ் மற்றும் அர்ஜ் யூரினரி இன்கான்டினென்ஸ் என்று குறிப்பிடுவார்கள்.

ஆண்டுதோறும், ஜூன் மாதம் 17 முதல் 23ஆம் தேதி வரை உலக கான்டினென்ஸ் வாரமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த வாரம் முழுதும் இயற்கை உபாதைகளை அடக்க இயலாமை, அடிக்கடி சிறுநீர் கழித்தல், சிறுநீர்ப்பை பிரச்சினைகள் குறித்து விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படும். குறிப்பாக பெண்களிடம் இது குறித்த விழிப்புணர்வு இல்லை. ஆனால் இதனால் உடல் மற்றும் மனம் சார்ந்த பாதிப்பு ஏற்படும் என்பதால் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.’’
பாதிக்கப்பட்டவர்களில் 50%க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவ உதவியை நாடுவது இல்லை. இப்பிரச்சினைக்கு தகுந்த நேரத்தில், மகளிர் நலம் மற்றும் சிறுநீரக மருத்துவரை அணுகி உரிய பரிசோதனை செய்து அதற்கான சிகிச்சை முறைகளை பின்பற்ற வேண்டும்.

அவ்வாறு செய்வதால் இதற்கான தீர்வினை அடைய முடியும். மேலும் பரிசோதனையில் ஆரம்ப கால அறிகுறிகள் உள்ளவர்கள் எளிய இடுப்பு மற்றும் அடித்தள தசைப் பயிற்சி (pelvic floor muscle exercises), சிறுநீர்ப்பை பயிற்சி பழகுவித்தல் (bladder training) போன்ற பயிற்சிகளை இயன்முறை மருத்துவரின் உதவியுடன் பின்பற்றினால் விரைவில் பிரச்சினை குறைய வாய்ப்புள்ளது” என்கிறார் இயன்முறை மருத்துவரான பேராசிரியர் சத்யபிரபா.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *